போலி ஆவணங்களுக்கு ரூ.772 கோடி கடன்.. ஐடிபிஐ வங்கி செய்த மிகப்பெரிய மோசடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பஞ்சாப் நேஷனல் வங்கி வைர வியாபாரிகளான நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்சி ஆகியோருக்குப் போலி ஆவணங்களை அடைப்படியாகக் கொண்டு சுமார் 13,000 கோடி ரூபாய் அளவிலான கடனை கொடுத்த அதிர்வுகள் இன்னும் தீராத நிலையில் தற்போது ஐடிபிஐ வங்கியும் இதேபோன்ற மோசடியைச் செய்துள்ளது.

 

ஆந்திரா, தெலுங்கானா

ஆந்திரா, தெலுங்கானா

ஐடிபிஐ வங்கிகளின் ஆந்திரா பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநில வங்கி கிளைகளில் சுமார் 772 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் முறைகேடான வகையில் அளிக்கப்பட்டுள்ளதை ஐடிபிஐ உயர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மீன் வளர்ப்பு வர்த்தகம்

மீன் வளர்ப்பு வர்த்தகம்

2009-2013ஆம் ஆண்டுக் காலத்தில் இம்மாநில வங்கிகள் மீன் வளர்ப்பு வர்த்தகத்திற்காகப் போலி குத்தகை ஆவணங்களை வைத்து இல்லாத மீன் வளர்ப்புக் குளங்களுக்குக் கடன் அளித்துள்ளது.

குற்றம்

குற்றம்

இந்தக் கடனுக்கான ஆவணங்களைச் சரியான முறையில் ஆய்வு செய்யாமல் கடன் வழங்கியதே இதற்கு முக்கியக் காரணம் என ஐடிபிஐ வங்கி தெரிவித்துள்ளது.

2 அதிகாரிகள்
 

2 அதிகாரிகள்

இதற்கு 2 அதிகாரிகள் காரணம் எனவும் அதில் ஒருவரை பணிநீக்கம் செய்யதுள்ளதாகவும், மற்றொருவர் ஏற்கனவே ஓய்வுபெற்றுள்ளதாகவும் ஐடிபிஐ வங்கி உயர் மட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிபிஐ

சிபிஐ

இந்த 772 கோடி ரூபாய் மோசடி குறித்துச் சிபிஐ 2 வழக்குகள் பதிவு செய்துள்ளது. இதற்கான ஆய்வையும், விசாரணையும் சிபிஐ அதிகாரிகள் துவங்கியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IDBI Bank issued Rs.772 crore loan with fake documents

IDBI Bank issued Rs.772 crore loan with fake documents
Story first published: Thursday, March 29, 2018, 16:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X