2018-2023-ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் போட்டிகளுக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா மிகப் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது.
சோனி மற்றும் ஜியோ நிறுவனங்களும் பிசிசிஐ நடத்தும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு உரிமை கோடி ஒப்பந்தங்களைக் கோரியிருந்த போதிலும் ஸ்டார் இந்தியா நிறுவனமானது இதுவரை யாரும் எதிர்பார்க்காத அளவில் ரூ.6,138.1 கோடி ரூபாய் கொடுத்து ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது. இதற்கு முன்பு 2012-2018 ஆண்டு வரை கிரிக்கெட் போர்டுகளை ஒளிபரப்ப 3,851 கோடி ரூபாய் கொடுத்து ஸ்டார் இந்தியா வங்கி இருந்தது.
டிவிட்
பிசிசிஐ நிர்வாகத்தின் தற்போதைய பொருளாளர் அனிருத் சவுத்ரி இது குறித்து வெளியிட்ட டிவிட்டில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள் என்றும் ஒரு கிரிக்கெட் போட்டிக்குச் சராசரியாக 60.1 கோடி என 6,138.1 கோடி கொடுத்து ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
ஐபிஎல்
ஐபிஎல் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமையும் ஸ்டார் இந்தியா நிறுவனம்16,347.5 கோடி ரூபாய் கொடுத்து அடுத்த 5 வருடத்திற்கு வாங்கியுள்ளது. பிசிசிஐ நடத்தும் கிரிக்கெட் போட்டிகள் ஒன்றுக்கு 55 கொடி ரூபாய் முதல் 60 கோடி ரூபாய் வரை விலை போகும் என்று எதிர்பார்த்த நிலையில் 60.1 கோடி ரூபாய் என விலை கொடுத்து வாங்கி இருக்கிறது.
கூகுள், பேஸ்புக்
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் 2018 ஏப்ரல் 15 முதல் 2023 மார்ச் 31 வரையிலான கிரிக்கெட் போட்டிகளை டிஜிட்டல் முறையில் ஒளிபரப்ப பேஸ்புக், கூகுள் உட்பட 6 நிறுவனங்கள் போட்டி போட்டுள்ளன.
ஜியோ, சோனி
ஆனால் ஸ்டார் இந்தியா, ரிலையன்ஸ் இடஸ்ட்ரீஸ் மற்றும் சோனி பிக்ச்சர்ஸ் நிறுவனங்களுக்குத் தான் ஆன்லைன் பிட்டிங்கில் டிஜிட்டில் முறையில் ஒளிபரப்ப வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.