மத்திய அரசு 2017-2018 நிதி ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 6.84 கோடியாக உயர்ந்து இருப்பதாகவும் இதுவே 2016-2017 நிதி ஆண்டில் 5.43 கோடி நபர்களாக இருந்ததாகவும், இது 26 சதவீத உயர்வு என்றும் தெரிவித்துள்ளது.
2016-2017 நிதி ஆண்டில் புதிதாக 85.51 லட்சம் நபர்கள் வருமான வரி தாக்கல் செய்ததாகவும், இதுவே 2017-2018 நிதி ஆண்டில் 99.49 லட்சமாக உயர்ந்ததாகவும் இது 16.3 சதவீத வளர்ச்சி என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அரசு 2017-2018 நிதி ஆண்டில் 1.49 லட்சம் கோடி ரூபாய் வரை திருப்பி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நிகர நேரடி வரி வசூல்
அரசு வெளியிட்டுள்ள தரவின் படி 2016-2017 நிதி ஆண்டில் பெற்ற நேரடி வரியை விட 2017-2018 நிதி ஆண்டில் 9.95 லட்சம் கோடி ரூபாய் என 17.1 சதவீதம் கூடுதலாக வசூல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தனிநபர் வருமான வரி
தனிநபர் வருமான வரி தாக்கல் 18.9 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதில் பங்கு பரிவர்த்தனை வரியும் அடங்கும்.
எண்ணிக்கை உயர்வு
கடந்த 4 ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை உயர்வுக்கான முக்கியக் காரணம் வரி செலுத்தாதவர்களின் விவரங்களை எடுத்து அவர்களுக்கு மின்னஞ்சல், எஸ்எம்எஸ் மற்றும் கடிதம் மூலமாக வருமான வரித் துறை அறிவுறுத்தியதன் பேரில் தான் நடைபெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
மாற்றம் இருக்கும்
வருமான வரி தாக்கல் செய்துள்ள விவரங்கள் நிலையானது இல்லை என்றும் இன்னும் வரி செலுத்தாமல் நிலுவையில் இருப்பவர்கள் செலுத்தும் போது தான் முழு விவரங்களும் தெரியவரும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications