கிராஜூவிட்டி காலத்தை 5 வருடத்திலிருந்து 3 வருடமாகக் குறைக்க அரசு திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாத சம்பளக்காரர்களுக்குப் பிஎ பணம் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது கிராஜூவிட்டி, ஒரு நிறுவனத்தில் 5 வருடம் முழுமையாகப் பணியாற்றினால் மட்டுமே கிராஜூவிட்டி கிடைக்கும். இதனை 3 வருடமாகக் குறைக்கலாம் என அரசு ஆலோசனை செய்து வருகிறது.

 

இது நடைமுறைப்படுத்தினால் பல லட்சம் ஊழியர்கள் பெரிய அளவிலான நன்மை அடைவார்கள். இந்தியாவில் இருக்கும் பல்வேறு ஊழியர்கள் சங்கம் இதுகுறித்துப் பல முறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில் தற்போது இதுகுறித்த ஆலோசனை செய்யத் துவங்கியுள்ளது அரசு.

 
கிராஜூவிட்டி காலத்தை 5 வருடத்திலிருந்து 3 வருடமாகக் குறைக்க அரசு திட்டம்..!

இந்நிலையில் தொழிலாளர் அமைச்சகம் கிராஜூவிட்டி கால அளவை 5 வருடத்தில் இருந்து 3 வருடமாகக் குறைக்கப் பரிந்துரை செய்துள்ளது. மேலும் தொழிலாளர் அமைச்சகம், இதுபற்றிப் பிற துறைகள் மற்றும் அரசு நிறுவனங்கள் மத்தியில் ஆலோசனை செய்து வருகிறது, இதற்கான இறுதி முடிவுகள் இன்னும் சில வாரத்தில் தெரியும்.

நிரந்தர ஊழியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அனைத்து நன்மைகளையும், குறிப்பிட்ட கால அறிவிற்கு (fixed-term employment) மட்டும் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ள நிலையில், கிராஜூவிட்டி-யும் வழங்க வேண்டும் என்பதற்காக இந்தக் கால அளவீட்டை மாற்றத் திட்டமிட்டுள்ளது அரசு.

தற்போது இது குறிப்பிட்ட கால அளவில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தான் பணியாற்றும் வருடங்கள் அடிப்படையில் கிராஜூவிட்டி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gratuity Time Period Might be Reduced From 5 to 3 Years

Gratuity Time Period Might be Reduced From 5 to 3 Years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X