இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தனது நேவிக் ப்லீட்டை விண்ணில் செலுத்த தயாராகி வரும் நிலையில் புதிய வர்த்தக முயற்சியை எடுக்க உள்ளது.
முதல் செயற்கைக்கோள்
ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் தலைமையில் நடு மற்றும் சிறு நிறுவனங்கள் இணைந்து IRNSS-1L என்னும் நேவிகேஷன் செயற்கைக்கோளை புதிய ஆட்டாமிக் கிளாக் உடன் இஸ்ரோ கண்காணிப்பில் உருவாக்கியுள்ளது.
இது தனியார் நிறுவனங்களுக்காக இஸ்ரோ உருவாக்கப்பட்ட பிரத்தியேக தளத்தில் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ஆகும்.
நாளை..
இந்தச் செயற்கைக்கோள் நாளை ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.
யூரோகன்செல்ட்
2026ஆம் ஆண்டுக்குள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 3,000க்கும் அதிகமான செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த உள்ளது. இதனால் உலக நாடுகளில் இருக்கும் தனியார் நிறுவனங்களும் இதன் தாக்கம் பெரிய அளவில் உள்ள நிலையில் அடுத்தச் சில வருடங்களில் இத்துறை பெரிய அளவிலான வளர்ச்சியை அடைய உள்ளது.
மிகப்பெரிய தனியார் நிறுவனம்
ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் சாப்ட்பேங்க் நிறுவன முதலீட்டில் உருவான ஓன்வெப் என்னும் நிறுவனம் தனியார் செயற்கைக்கோள் நிறுவனங்களில் மிகப்பெரியது.
மேலும் இந்நிறுவனம் சுமார் 1,000 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
வர்த்தகம்
இந்நிலையில் இஸ்ரோவும் இந்தியாவில் இருக்கும் தனியார் நிறுவனங்கள் செயற்கைக்கோள்களைத் தயாரிக்க ஊக்கப்படுத்தி வருகிறது. இதன் மூலம் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் விண்ணில் செலுத்த முடியும்.
இதனால் இந்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் இஸ்ரோவிற்கு அதிகளவிலான வருவாய் கிடைக்கும் எனத் திட்டமிட்டு, இப்புதிய வர்த்தகப் பாதையில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது இஸ்ரோ.
புதிய தளம்
தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காகவே இஸ்ரோ தனிப்பட்ட தளத்தை உருவாக்கியுள்ளது. இத்தளத்தில் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் தான் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.