டெலிகாம் நிறுவனங்களை மட்டுமல்லாமல் நாட்டு மக்களின் இணையப் பயன்பாட்டையே தலைகீழாக மாற்றியதுமுகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தான்.
முகேஷ் அம்பானியின் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் சேச்சுரேஷன் பாயின்ட் அடைந்துவிட்ட காரணத்தினாலோஅல்லது புதிய வர்த்தகத்துடன் தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜியத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தாராஎன்பது தெரியவில்லை.
ஆனால் ஒவ்வொரு மாதமும் புதிதாகத் துவங்கப்பட்ட தனது ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகத்தைச் சார்ந்துஅறிவிப்புகளும், புதிய வர்த்தகத் திட்டங்களும் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இன்று புதிய திட்டம் குறித்தஅறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடுத்த படி..
ஸ்மார்ட்போன், 4ஜி பியூச்சர் போன்களுக்கு அடித்தப்படியாக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோலேப்டாப் உடன் சிம்கார்டு இணைத்து விற்பனை செய்யக்கூடிய மிகப்பெரிய திட்டத்தை அறிவிக்க உள்ளது.
இதன் மூலம் ஜியோவின் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறக்கூடிய வருமானம் மிகப்பெரிய அளவில் உயரும்.
பேச்சுவார்த்தை
இதற்காக ஜியோ நிறுவனம் தற்போது அமெரிக்காவின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்கம் உடன்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம், விண்டோஸ் 10 ஓஎஸ் கொண்ட லேப்டாப்களில்செல்லூலார் இணைப்புடன் இந்தியாவில் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
4ஜி பியூச்சர் போன்
ஏற்கனவே இந்தியாவின் 50 சதவீத சந்தை மாற்றப்போகும் ஜியோவின் 4ஜி பியூச்சர் போன் திட்டத்தில் குவால்கம்பணியாற்றி வரும் நிலையில், தற்போது புதிதாக ஒரு திட்டத்தில் இரு நிறுவனங்களும் இணையப் பேச்சுவார்த்தைநடத்தி வருகிறது.
3 முனை இணைப்பு
ஜியோ உடன் பேச்சுவார்த்தை நடத்தியதில், இந்நிறுவனம் லேப்டாப்களில் செல்லூலார் இணைப்புடன் டேட்டா மற்றும்கண்டென்ட் (தரவுகள்) சேர்ந்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது எனக் குவால்கம் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின்உயர் தலைவர் மிகுல் நூஸ் தெரிவித்தார்.
ஸ்மார்ட்ரான்
இதுமட்டும் அல்லாமல் குவால்கம் தற்போது இந்தியாவில் முன்னணி Internet of Things துறை சார்ந்த ஸ்மார்ட்ரான் நிறுவனத்துடன் இணைந்து லேப்டாபில் செல்லூலார் இணைப்புடன் இயங்கும் திட்டத்தில் பணியாற்றி வருகிறது. இதேபோல் திட்டத்தைத் தான் தற்போது ஜியோவும் செய்ய முடிவு செய்து வருகிறது.
என்ன பயன்..?
லேப்டாப்பில் மொபைல் இணைப்பைக் கொண்டு வருவதன் மூலம் வாடிக்கையாளர் ஸ்மார்ட்போன்களில் இருப்பதுபோலவே முழு நேரமும் இண்டர்நெட் இணைப்புடன் இருக்க முடியும். இதனால் ஜியோவின் வருமானம் தாறுமாறாக உயரும்.
..." data-gal-src="http:///img/600x100/2018/04/5-indiapeople-1523601214.jpg">முதலாளி ஆகும் வாய்ப்பு..!