தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் வங்கிகளின் தலைமை கிளைகளில் இருந்து பணம் அனுப்பாததால் ஏடிஎம் மையங்களில் பணத்தினை எடுக்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தினை நிரப்ப வேண்டிய ஏஜன்சிகளும் பணத்தினைச் சரியான நேரத்தில் இயந்திரங்களில் நிரப்பவில்லை என்று தெரியவந்துள்ளது.
70% ஏடிஎம் மையங்கள் காலி
தெலுங்கானா மற்றும் ஆந்திரா என இரண்டு மாநிலங்களிலும் தாராங்கா, மௌலா அலி, குஷாயுகுடா, சயனிக்புரி, நெதாமாத், எல்கில், ஆசா ராவ் நகர், நாகார்ஜூ நகர், கம்லா நகர், தெம்மைகுடா ஆகிய இடங்களில் 70 சதவீத ஏடிஎம் மையங்கள் காற்று வங்கி வருகிறன.
எப்ஆர்டிஐ மசோதா
நிதியில் முடிவு மற்றும் வைப்பு காப்புறுதி மசோதாவான எப்ஆர்டிஐ சட்டம் அமலுக்கு வந்த பிறகு வங்கிகள் திவால் ஆனால் தங்களது பணத்தினை எடுக்க முடியாது, மோசடிகள் மற்றும் வாரா கடன் போன்ற சிக்கல்களால் வங்கிகள் தவித்து வருகிறன என்று மக்கள் அஞ்சுவதாகவும் தகவல்கள் கூறுகிறன.
ஏடிஎம் இயந்திரங்கள்
அதுவும் இந்த இரண்டு மாநிலங்களில் உள்ள மக்கள் ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தினைப் போட்ட உடன் தங்களுக்குத் தேவையில்லை என்றாலும் எடுத்துச் செல்வதாகவும் விஷாகபட்டண எஸ்பிஐ வங்கி கிளை நிர்வாகி ஒருவர் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்து கொண்டார்.
அரசு
அரசு எப்ஆர்டிஐ மசோதா குறித்துப் பல முறை அறிவிப்புகளை வெளியிட்டும் கூட இந்த இரண்டு மாநிலங்களிலும் மக்கள் இப்படிச் செய்வது ஆச்சர்யத்தினை ஏற்படுத்துகிறது.
வங்கி திவால் சட்டம்
வங்கி திவால் சட்டத்தில் கொண்டு வரப்பட உள்ள திருத்தத்தினாலும் பொதுத் துறை வங்கிகள் மற்றும் வங்கி நிறுவனங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று அரசு பல முறை விளக்கம் அளித்தது மட்டும் இல்லாமல் சேமிப்புக் கணக்குகள் மற்றும் டெபாசிட்களில் இருந்து பணத்தினை எடுக்க வேண்டாம் என்று தற்போது இந்த மாநில மக்களுக்கு வலியுறுத்தி வருகிறனர்.
எங்கடா..." data-gal-src="http:///img/600x100/2018/04/msd9-1523514262.jpg">