நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ், சலில் பாரிக்-ஐ சிஇஓவாக நியமித்த பின்பு பல முக்கிய நடவடிக்கைகளையும் மாற்றங்களையும் இன்போசிஸ் நிர்வாகத்தில் கொண்டு வந்தார்.
இந்நிலையில் இன்போசிஸ் ஊழியர்களைக் குறிவைத்து முக்கிய முடிவுகள் எடுத்துள்ளது.
2 லட்சம் ஊழியர்கள்
சில நாட்களுக்கு முன்பு காலாண்டு மற்றும் வருடாந்திர முடிவுகளை அறிவித்த இன்போசிஸ் தனது 2,00,000 ஊழியர்களுக்குச் சரியாக வேரியபில் பே அளிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனத் திட்டமிட்டு சுமார் 10 மில்லியன் டாலர் நிதியை ஸ்பெஷல் போனஸ் பூல்-ஐ அறிவித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 20 சதவீதத்தை அடையும் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
13,000 கோடி ரூபாய்
இதேபோல் 2019ஆம் நிதியாண்டில் இன்போசிஸ் தனது முதலீட்டாளர்களுக்கு 13,000 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது. இதற்குத் தக்க வகையில் வர்த்தகமும், நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் போன்ஸ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2 வருடம்
கடந்த 2 வருடத்தை விடவும் ஊழியர்களுக்கு அதிக வேரியபில் பே அளிக்க வேண்டும் எனவும் இன்போசிஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளசு.
100% வேரியபில் பே
மேலும் மார்ச் காலாண்டில் இன்போசிஸ் ஊழியர்களுக்கு 100 சதவீத வேரியபில் பே அளிக்கப்பட்டுள்ளது இது கடந்த 10 வருடத்தில் அதுபோல் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பதவி உயர்வு
இக்காலாண்டில் சுமார் 2,221 பேருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது, 86 சதவீத ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் ஊதிய உயர்வும், மீதமுள்ள 15 சதவீத ஊழியர்கள் 8 வருடத்திற்கும் அதிகமான அனுபவம் உடையர்வர்கள். இவர்களுக்குச் சம்பள உயர்வு ஜூலை முதல் வழங்கப்படும் என இன்போசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அட்ரிஷன் லெவல்
இன்போசிஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேறும் விகிதமான அட்ரிஷன் லெவல் மார்ச் காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. டிசம்பர் காலாண்டில் இதன் அளவு 18.7 சதவீதமாகவும், மார்ச் 2017 காலாண்டில் 17.1 சதவீதமாகவும் இருந்தது.
ஸ்பெஷல் போனஸ் பூல்
மார்ச் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட அதிகளவிலான ஊழியர்கள் வெளியேற்றத்தின் வாயிலாகவே ஸ்பெஷல் போனஸ் பூல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள்
இன்போசிஸ் நிறுவனத்தில் தற்போது அனைத்து மட்டத்திலும் வர்த்தகத்தை நிலையாகலும், தொடர் வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்ல நம்பிக்கையான மற்றும் திறமையான ஊழியர்களை எதிர்பார்க்கிறது. இதனால் திறமையான ஊழியர்களுக்கு அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
சம்பள உயர்வு
இந்நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய ஊழியர்களுக்கு அதிகப்படியாக ஒற்றை இலக்க ஊதிய உயர்வு அளிக்க முடிவு செய்துள்ளதாகப் பிரவின் ராவ் காலாண்டு முடிவுகளை வெளியிடும்போது தெரிவித்தார்.
ரூ.2,000 கோடி அபேஸ்..!
நஷ்டம்
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications