இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருவது மட்டும் அல்லாமல் இத்துறையில் வல்லரசு நாடுகளுக்கு இணையப் பெரிய அளவிலான வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது.
இந்நிலையில் இஸ்ரோ நிலவுக்குச் செல்லும் முயற்சியின் முதல் கட்டத்தைச் சந்திராயன்-1 மூலம் முடித்துள்ள நிலையில் தற்போது 2வது திட்டத்தைச் சந்திராயன்-2 செயற்கைக்கோளை வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் விண்ணில் செலுத்த உள்ளது.
சந்திராயன்-1
இஸ்ரோ தலைமையில் உருவாக்கப்பட்ட சந்திராயன்-1 தான் இந்தியாவின் முதல் லூனார் பிரோப். இது அக்டோபர் 22, 2008ஆம் ஆண்டு விண்வெளியில் பிஎஸ்எல்வி ராக்கெட் வாயிலாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இத்திட்டத்திற்குத் தலைமை தாங்கியது தமிழரான மயில்சாமி அண்ணாதுரை.
சந்திராயன்-2
தற்போது நிலவு குறித்த ஆராய்ச்சியின் அடுத்தகட்ட திட்டமாகச் சந்திராயன் 2 திட்டத்திற்கு ரஷ்யா உடன் இணைந்து செய்ய இஸ்ரோ இத்திட்டத்தை நவம்பர் 12, 2007இல் கையில் எடுத்தது. ஆனால் பல காரணங்களுக்காக இத்திட்டம் இதுநாள் வரை முடங்கியது.
அனைத்துத் தடைகளையும் தாண்டி சந்திராயன்-2 வருகிற அக்டோபர் மாதத்தில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
800 கோடி ரூபாய்
சந்திராயன்-2 திட்டம் சுமார் 800 கோடி கூராய் மதிப்புடையது. இதில் விண்ணில் ஏவு உதவு ராக்கெட் மற்றும் பிறவற்றின் மதிப்பு 200 கோடி ரூபாய். மேலும் செயற்கைக்கோளின் மைய அமைப்பின் மதிப்பு 600 கோடி ரூபாய் என் இஸ்ரோ அமைப்பின் தலைவர் கே சிவன் தெரிவித்துள்ளார்.
முக்கியத் தகவல்கள்
சந்திராயன்-2 திட்டத்தில் லேண்டர், ரோவர் பிரோப் ஆகியவற்றை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. நிலவில் செயற்கைக்கோள் தரையிறங்கிய உடன் லூனார் படுகை மற்றும் மண் ஆகியவற்றை ஆய்வு செய்து தகவல்களைத் திரும்ப அனுப்ப முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மலிவு மற்றும் சிறப்பு
சந்திராயன்-2 திட்டம் மலிவானது மட்டும் அல்லாமல் சிறப்பானதும் கூட என அணு சக்தி மற்றும் விண்வெளி அமைச்சகத்தின் தலைவர் ஜித்தேந்திரா சிங் கூறினார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications