பிரிட்டன் நாட்டிற்குச் சென்ற பிரதமர் நிரேந்திர மோடி , அந்நாட்டில் இருக்கும் வேலைவாய்ப்புகளைக் காப்பாற்றவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் 1 பில்லியன் பவுண்டுக்கும் அதிகமான தொகையை இந்தியா முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
அப்ப நம் நாட்டில்..??
நட்புறவு
மோடியின் இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் மத்தியில் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முதலீடு சார்ந்த பல ஒப்பந்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவற்றைச் செய்யப்பட்டுள்ள நிலையில்.
அந்நாட்டு வேலைவாய்ப்புகளுக்காக 1 பில்லியன் பவுண்டுக்கு முதலீடு இரு நாடுகள் மத்தியிலான நட்புறவு மேம்படும் எனக் கூறப்படுகிறது.
சந்திப்பு
மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஆகியோரின் சந்திப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் பிரிட்டன் அரசு புதிய இந்தியா-யுகே வர்த்தகக் கூட்டணியை அறிவித்தது.
புதிய முதலீடு
மேலும் இந்நாட்டின் சர்வதேச வர்த்த துறை கூறுகையில் இந்தியாவின் புதிய 1 பில்லியன் பவுண்ட் முதலீடு 5,750 பிரிட்டன் வேலைவாய்ப்புகளைப் பாதுகாத்தும், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்கும் எனத் தெரிவித்துள்ளது.
வளர்ச்சி
இந்தியா யுகே நாடுகளுக்கு மத்தியில் 2017இல் சுமார் 18 பில்லியன் பவுண்ட் வரையிலான வர்த்தகத்தைச் செய்துள்ளது. இது 2016ஆம் ஆண்டை விடவும் 15 சதவீதம் அதிகமாகும்.
ஐடி
அதேபோல் நாஸ்காம் மற்றும் டெக்யுகே அமைப்புகள் இணைந்து யுகே-இந்தியா டெக் கூட்டணியைப் புதிதாக உருவாக்கியுள்ளது. இதன் மூலம் எதிர்காலத் தொழில்நுட்பம் குறித்து ஆய்வு, ஆராய்ச்சியை இரு நாட்டு நிறுவனங்களும் இரு நாடுகளிலும் செய்ய முடியும்.
இந்தியாவில்..
இந்தியாவில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வரும் நிலையிலும், பட்டதாரி இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வரும் நிவையில் பிரிட்டன் நாட்டு வேலைவாய்ப்புகளைக் காப்பாற்ற இந்தியாவின் 1 பில்லியன் பவுண்ட் முதலீடு இந்தியர்களுக்கு வேதனையை அளிக்கிறது.
வேலைவாய்ப்பு விகிதம்
இந்தியாவில் வேலைவாய்ப்பு விகிதத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றால் ஒரு வருடத்திற்கு 81 லட்சம் வேலைவாய்ப்புகளை இந்திய அரசு அதாவது மோடி அரசு உருவாக்க வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications