மத்திய அமைச்சர் நித்தின் கட்காரி டெல்லி - மும்பை இடையில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேஷ், ராஜஸ்தான் என இரு மாநிலங்களுக்கு நன்மை அளிக்கும் விதமாக உள்ள சாம்பல் எக்ஸ்பிரஸ் வழிப்பாதையுடன் இந்தப் புதிய டெல்லி - மும்பை நெடுஞ்சாலை இணைக்கும்படி அமைக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
பயன்
டெல்லி - மும்பை இடையிலான இந்த எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கும் வரும்போது தலைநகர் டெல்லியில் உள்ள டிராப்பிக் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி - மீரட்
இதே போன்று டெல்லி - மீரட் இடையில் ஒரு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்றும் அதனால் கிழக்கு டெல்லியில் உள்ள டிராப்பிக் குறையும் என்று கூறுகின்றனர்.
வணிக வாகனங்கள்
டெல்லிக்கு ஒரு நாளில் மட்டும் 40,000-க்கும் அதிகமாக வணிக வாகனங்களை வந்து செல்வதாகத் தரவுகள் கூறுகின்றன.
10 திட்டங்கள்
டெல்லியைச் சுற்றி 10 நெடுஞ்சாலை திட்டங்களுக்கான பணிகள் 35,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
விமான நிலையம்
தவுலா குவானில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு எந்த ஒரு டிராப்பிக் சிகனல் பிரச்சனையும் இல்லாமல் பயணிக்க ஏற்றவாறு 260 கோடி ரூபாய் செலவில் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் நித்தின் கட்காரி தெரிவித்துள்ளார்.