தலைமறைவாக உள்ள பொருளாதாரக் குற்றவாளிகள் அவசரச் சட்டம், 2018-ஐ பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்ததைத் தொடர்ந்து, இந்த அவசரச் சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து இச்சட்டம் அவசரச் சட்டமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2018 ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய நிதித்துறை பரிந்துரைத்தபடி தலைமறைவாக உள்ள பொருளாதாரக் குற்றவாளிகள் அவசரச் சட்டம் 2018-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தலைமறைவாக உள்ள பொருளாதாரக் குற்றவாளிகள் அவசரச் சட்டம் 2018 (அவசரச் சட்டம்), பொருளாதாரக் குற்றவாளிகளின் குற்ற நடவடிக்கைகளையும், அவர்களது சொத்துக்களையும் முடக்கிவைக்கவும் பறிமுதல் செய்யவும் இந்திய அதிகாரிகளுக்கு அதிகாரமளிக்க வகை செய்துள்ளது. இதன் மூலம் பொருளாதாரக் குற்றவாளிகள் இந்திய நீதிமன்றங்களின் எல்லைக்கு அப்பால் இருந்துகொண்டு, இந்தியச் சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்புவதைத் தடுக்கவும் இந்த அவசரச் சட்டம் வகை செய்கிறது.
இந்த அவசரச் சட்டம் ஒரு நீதிமன்றம் (சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டம் 2002-ன் படி அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம்), ஒரு நபரைத் தலைமறைவாக உள்ள பொருளாதாரக் குற்றவாளி என அறிவிக்க வகை செய்கிறது.
தலைமறைவாக உள்ள பொருளாதாரக் குற்றவாளிகள் அவசரச் சட்டம் 2018 கீழ்க்காணும் அம்சங்களைக் கொண்டதாகும்:
- ஒரு நபர் தலைமறைவாக உள்ள பொருளாதாரக் குற்றவாளி என அறிவிக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வது;
- பொருளாதாரக் குற்றவாளியின் சொத்துக்களை முடக்கிவைத்து, அவர் மீது குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்;
- பொருளாதாரக் குற்றவாளி என்று கருதப்படுபவருக்குச் சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புதல்;
- பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தல் அல்லது குற்ற நடவடிக்கைகளைத் தொடருதல்;
- தலைமறைவாக உள்ள பொருளாதாரக் குற்றவாளி, சிவில் உரிமைகளைக் கோர உரிமையற்றவராக்குதல்;
- சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கவும், அதனை விற்பனை செய்யவும் நிர்வாகி ஒருவரை நியமித்தல்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications