நமது ஆதார் கார்டில் நம்மைப் பற்றிய தகவல்கள் அதாவது நம் கைரேகை மற்றும் கருவிழி விவரங்கள் அடங்கி உள்ளன. அது மட்டும் இல்லாமல் இன்று அணைத்துப் பொதுத் துறை சேவைகளுக்கும் ஆதார் எண் சான்றாகக் கேட்கப்படுகிறது. இந்தச் செயல் தனிமனித சுதந்திரத்திற்கு மிகப் பெரிய அச்சமாகத் திகழ்கிறது.
எனவே முடிந்த அளவிற்கு நமது தனிப்பட்ட விபரங்களைப் பாதுகாப்பாக வைக்கவேண்டும். இதற்கு முதல் படி நாம் நமது ஆதார் எண்ணுடன் மொபைல் நம்பரை இணைக்க வேண்டும். இந்த இணைப்பை எளிதாக மொபைல் எஸ்எம்எஸ் மூலமோ அல்லது அருகில் உள்ள ஆதார் மையத்திலோ செய்யலாம்.

இணைத்த பின் நமக்குத் தேவைப்படும்போது மட்டும் ஆதார் தகவல்களை மொபைல் மூலம் பெறக்கூடிய ஓடிபி-யை வைத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் நமது ஆதார் தகவல்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.
முழு விபரங்களுக்குக் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.


Click it and Unblock the Notifications