இந்த பங்கை ரூ.10,000 கொடுத்து வாங்கி இருந்தால் 14 வருடத்தில் ரூ.1.40 லட்சமாக வளர்ந்து இருக்கும்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் திங்கட்கிழமை 100 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தினைப் பெற்றுள்ள நிலையில் இந்த நிறுவனம் 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ஐபிஓ மூலமாகப் பங்கு சந்தை மூலம் முதலீட்டினை துவங்கியது.

இந்தப் பங்குகளை அப்போது 10,000 ரூபாய் கொடுத்து வாங்கி இருந்தால் அது இப்போது 1.40 லட்சம் ரூபாயாக வளர்ந்திருக்கும்.

டாடா குழுமம்

டாடா குழுமம்

டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னால் தலைமை செயல் அதிகாரி மற்றும் டாடா குழுமத்தின் தற்போதைய தலைவராகவும் உள்ள என் சந்திரசேகரன் டிசிஎஸ் தொடர்ந்து மதிப்புகளைக் கூட்டி வருகிறது. வரும் மாதங்கள் மற்றும் காலாண்டுகளிலும் டிசிஎஸ் சிறப்பாகச் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

40,000 கோடி ரூபாய்

40,000 கோடி ரூபாய்

வியாழக்கிழமை டிசிஎஸ் நிறுவனம் 4-ம் காலாண்டு அறிக்கையினை வெளியிட்ட பிறகு வெள்ளிக்கிழமை மட்டும் 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளைப் பெற்றதே இந்தச் சாதனைக்கான காரணமாக அமைந்துள்ளது.

காலாண்டு அறிக்கை

காலாண்டு அறிக்கை

இந்தியாவின் மிகப் பெரிய ஐடி சேவைகள் நிறுவனமான டிசிஎஸ் 6,904 கோடி ரூபாய் நிகர லாபத்தினைப் பெற்றுள்ளது, டாடா குழுமம் 32,075 கோடி ரூபாய் செயல்பாடுகள் மூலமாக வருவாய் ஈட்டியுள்ளதாகவும், சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது இது 8.2 சதவீத உயர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலவரம்

இன்றைய நிலவரம்

இன்றைய பங்கு சந்தை முடிவில் டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் 8.80 புள்ளிகள் என 0.26 சதவீதம் உயர்ந்து 3,415.20 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS turned Rs 10,000 into Rs 1.40 lakh in 14 years

TCS turned Rs 10,000 into Rs 1.40 lakh in 14 years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X