டிசிஎஸ்-ஐ பின்தொடரும் முகேஷ் அம்பானி.. புதிய உச்சத்தை அடைய காத்திருக்கும் ரிலையன்ஸ்..!

டிசிஎஸ் நிறுவனம் சந்தை மதிப்பீட்டில் 100 பில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய நிலையை அடைந்தது, இந்திய வர்த்தகச் சந்தையைப் புரட்டிப் போட்டது மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தையிலும் இந்நிறுவனத்தின் நிலை உயர்ந்துள்ளது.

இத்தகைய நிலையில் அடுத்து 100 பில்லியந் டாலர் நிலையை அடையப்போவது யார் என்ற கேள்வி தான் தற்போது சந்தையில் முக்கியமானதாக உள்ளது.

அடுத்தது யார்..?

அடுத்தது யார்..?

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக இருக்கும் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் தான் அடுத்த 100 பில்லியன் டாலர் அளவை அடையும் நிலையில் உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

கச்சா எண்ணெய் முதல் டெலிகாம் வரையில் பல துறையில் வர்த்தகம் செய்யும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அக்டோபர் 2007இல் முதல் முறையாக 100 பில்லியன் டாலர் அளவை அடைந்தது. அப்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 39.5 ரூபாய்.

இப்போதைய நிலையில், ரூபாய் மதிப்பில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4.11 லட்சம் கோடி ரூபாய்.

 

வளர்ச்சி வேண்டும்..?

வளர்ச்சி வேண்டும்..?

இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டிசிஎஸ் நிறுவனத்திற்கு இணையாக 100 பில்லியன் டாலர் அளவை அடைய வேண்டும் என்றால் சந்தையில் இந்நிறுவன பங்குகள் சுமார் 11 சதவீதம் வளர்ச்சி அடைய வேண்டும்.

திங்கட்கிழமை நிலவரத்தின் படி ரீலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பு ரூபாய் மதிப்பில் 5.9 லட்சம் கோடியாகவும், டாலர் மதிப்பில் 89.1 பில்லியன் டாலராக உள்ளது.

 

இன்றைய நிலை..

இன்றைய நிலை..

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் 3.80 சதவீதம் வளர்ச்சி அடைந்து 971.60 ரூபாயாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+