நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ், அமெரிக்கா இன்சூரன்ஸ் நிறுவனமான டிரான்ஸ்அமெரிக்கா உடன் செய்த 2.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக டெக்சாஸ் பகுதியில் 3வது அலுவலகத்தைத் திறந்துள்ள டிசிஎஸ்.
ஊழியர்கள்
டெக்சாஸ் பகுதியில் இருக்கும் டிரான்ஸ்அமெரிக்கா அலுவலகத்தில் பல மாடிகளைக் கைப்பற்றி டிசிஎஸ் தற்போது அலுவலகத்தை அமைக்க உள்ளது. இதுமட்டும் அல்லாமல் டிரான்ஸ்அமெரிக்காவின் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் இணைய உள்ளனர்.
டிசிஎஸ்
ஏற்கனவே டிசிஎஸ் நிறுவனத்தின் அமெரிக்க வர்த்தகத்தில் சுமார் 3,500 பேர் பணியாற்றும் இந்தச் சூழ்நிலையில் டிரான்ஸ்அமெரிக்காவின் 200 ஊழியர்கள் டிசிஎஸ்-இல் சேர உள்ளனர்.
அமெரிக்கர்கள்
மேலும் இந்த அலுவலகத்தில் 200க்கும் அதிகமான டெக்சாஸ் மக்களைப் பணியில் அமர்த்த ஆர்வமாக உள்ளோம். இதன் மூலம் இப்பகுதியின் சமுக மற்றும் மக்கள் நலத்தை மேம்படுத்துவதில் டிசிஎஸ் மகிழ்ச்சி கொள்கிறது என இந்நிறுவனத்தின வங்கி, நிதிசேவை மற்றும் இன்சூரன்ஸ் தளத்தின் தலைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டவர்களுக்கு
அமெரிக்க அரசு வேலைவாய்ப்புகள் குறித்து அதிகளவிலான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் டிசிஎஸ் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளித்து வர்த்தகம் செய்யத் துவங்கியுள்ளது.
இதன் வாயிலாக இந்த அலுவலகத்திலும் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்குவது சுரேஷ் அவர்களின் கருத்து வாயிலாகத் தெரிகிறது.
இந்தியர்கள்
அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை இந்தியர்கள் அதிகளவில் எடுத்துக்கொள்கின்றனர் எனக் குற்றச்சாட்டு இருக்கும் காரணத்தால் ஐடி நிறுவனங்கள் இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் அமெரிக்கர்களைப் பணியில் அமர்த்த உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.