டிராக்டர் தயாரிப்பில் உலகளவில் முன்னோடியாக இருக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா இன்றைய அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிரைவர்லெஸ் டிராக்டர் உருவாக்கி இத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் ஆட்டோமேடிக் டிராக்டர்
நாக்பூரில் இருக்கும் தொழிற்சாலையில் மஹிந்திரா நிறுவனம் பேக் 1 என்னும் பெயரில் முதல் செமிஆட்டோமேடிங் டிரைவர்லெஸ் டிராக்டர்களைத் தயாரித்துக் குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு மட்டும் குறைந்த அளவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்த டிராக்டரில் விவசாயத்திற்குப் பயன்படும் வகையில் பல வசதிகளும், ரிமோட் மூலம் இயக்கும் வசதியையும் கொண்டுள்ளது.
பேக் 2
மேலும் பேக் 1 பெயரில் வந்துள்ள டிராக்டர்களை மேம்படுத்திப் பேக் 2 என அறிமுகம் செய்யப் பல கட்டமுறையில் பணிகள் நடந்து வருகிறது.
அறிவிப்பு
இதற்கான அறிவிப்பை இந்நிறுவனம் நுவோ 65 திறன் கொண்ட டிராக்டரை அறிமுகம் செய்யப்பட்டபோது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா விவசாய உபகரணங்கள் பிரிவு தலைவர் ராஜேஷ் தெரிவித்தார்.
அதேபோல் பேக் 1 டிரைவர்லெஸ் இல்லை அதை நாங்கள் இன்டிலிஜென்ட் டிராக்டர் என அழைக்கிறோம், ஆனால் பெயரில் வரும் அடுத்தடுத்த டிராக்டர்கள் அனைத்தும் டிரைவர்லெஸ் டிராக்டர்களாக இருக்கும்.
வெளிநாட்டு அறிமுகம்
ஏற்கனவே மஹிந்திரா நிறுவன டிராக்டர்களுக்கு வெளிநாட்டில் பெரிய அளவிலான வரவேற்பு இருக்கும் நிலையில் பேக் 2 டிராக்டர்களுக்குச் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என மஹிந்திரா நம்புகிறது.