கொச்சி: வரிக் குறைவு என்பதற்காகப் போலியான முகவரியில் ஆடம்பர கார்களைப் புதுச்சேரியில் பதிவு செய்து தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பயன்படுத்துவது போன்ற குற்றங்களுக்காகச் சென்ற ஆண்டு அமலா பால் மற்றும் கேரளா முன்னணி நடிகர்கள் பலர் சிக்கியது அனைவருக்கும் தெரியும்.
இப்போது கேரளா பெரம்பவூர் ஆர்டிஓ இது போன்று PY01 CQ 369 என்ற வாகன எண் உடன் பாண்டிச்சேரி போலி முகவரியில் பதிவு செய்துள்ள ஆடம்பர கார் மீது 60 லட்சம் ரூபாய் வரி வசூலித்து இருப்பது தெரியவந்துள்ளது.
பெண்ட்லி
இங்கிலாந்தினை தலைமயிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பெண்ட்லி உலகின் மிக வில உயர்ந்த ஆடம்பர காராகும்.
பெரம்பவூர் ஆர்டிஓ
ஏப்ரல் மாதத்தில் மட்டும் பெரம்பூரை சேர்ந்த ஆர்டிஓ இதே போன்று இரண்டு கார்களைப் பரிமுதல் செய்துள்ளார். அந்தக் கார்களும் வரிக் குறைவு என்பதற்காகப் புதுச்சேரியில் வாகன பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகம்
தமிழ்நாட்டைப் பொருத்தவரை 15 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் கார் வாங்கும் போது ஆடம்பர கார்களுக்கான செஸ் வரியைச் செலுத்த வேண்டும். கேரளாவில் இது 20 லட்சம் ஆக உள்ளது.
ஒரு நாடு ஒரே வரி
இதுப்போன்று வாகனங்களை முறைகேடாக வண்டியைப் பதிவு செய்யும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி வரும் நிலையில் இந்த வரியையும் ஜிஎஸ்டி-கீழ் கொண்டு வந்து நாடு முழுவதும் ஒரே வரி சென்ற சூழலை உருவாக்கவும் இந்திய அரசு முயற்சித்து வருகிறது.


Click it and Unblock the Notifications