ஆதாரில் எந்த ஒரு தனியுரிமை சிக்கலும் இல்லை.. சொல்கிறார் பில்கேட்ஸ்..!

ஆதாரில் எந்த ஒரு தனியுறிமை சிக்கலும் இல்லை என்றும் இதனை உலக வங்கி எல்லா நாடுகளிலும் நடைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் இதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்-ன் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிதி அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் இந்த ஆதார் சேவையினை அறிமுகம் செய்துள்ள நந்தன் நீலகேனியையும் உலக வங்கி தலைவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

நன்மைகள் அதிகம்

நன்மைகள் அதிகம்

ஆதாரால் நன்மைகள் அதிகம் என்றும், அனைத்து நாடுகளும் இதனைப் பயன்படுத்திச் சிறப்பான அரசு சேவைகளை அளிக்க முடியும் என்றும் பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை இது உருவாக்கும் என்றும் அதற்காக உலக வங்கிக்கு நிதி அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியுரிமை சிக்கல்கள்

தனியுரிமை சிக்கல்கள்

ஆதாரில் உள்ள தனியுரிமை சிக்கல்கள் குறித்துக் கேட்ட போது ஆதார் தரவு தளம் மிகவும் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் அதார் தரவுகளை யாராலும் திருட முடியாது, பையோமெட்ரிக் சரிபார்ப்பு இல்லாமல் மோசடி சாத்தியம் இல்லை, வங்கி சேவைகளுக்காக இதனைப் பயன்படுத்தும் போது எந்தச் சிக்கலும் இதில் வராது என்றும் பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

நந்தன் நீலக்கனியின் நண்பன்

நந்தன் நீலக்கனியின் நண்பன்

நான் நந்தன் நீலக்கனியின் நல்ல நண்பன் இவர் எடுத்துள்ள முயற்சிகள் டிஜிட்டல் உதவியுடன் கல்விக்கு உதவக் கூடியதாகவும் இருக்கும் என்றார்.

உன்னது முயற்சி

உன்னது முயற்சி

2016-ம் ஆண்டு ஆதார் குறித்து நிதி ஆயோக் ஏற்பாடு செய்திருந்து ஒரு கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த பில்கேட்ஸ் எந்த ஒரு நாட்டு அரசும் எடுத்திராத ஒரு உன்னது முயற்சி இது என்றும் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+