காட்ரிஜ், இமாமி நிறுவனங்களுக்கு டப் கொடுக்கும் பதஞ்சலி.. பாபா ராம்தேவ் அசத்தலான திட்டம்..!

இந்திய நுகர்வோர் சந்தையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைத்து பதஞ்சலி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் பாபா ராம்தேவ், தொடர்ந்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துவது மட்டும் அல்லாமல் புதிய வர்த்தகப் பிரிவுகளையும் ஆய்வு செய்து வருகிறார்.

இதன் வாயிலாகத் தற்போது சமையல் எண்ணெய் பிரிவை குறித்துத் தனது ஆட்டத்தைத் துவங்கியுள்ளார் பாபா ராம்தேவ்.

ருச்சி சோயா

ருச்சி சோயா

12,000 கோடி ரூபாய் வங்கிக் கடனில் திவாலாகிக் கிடக்கும் சமையல் எண்ணெய் தயாரிப்பு மற்றும் வர்த்தக நிறுவனமான ரூச்சி சோயா தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது.

 போட்டி

போட்டி

இந்நிறுவனத்தின் கைப்பற்றுவதன் மூலம் நாட்டின் சமையல் எண்ணெய் வர்த்தகத்தில் பெரிய அளவிலான பங்கை பெற முடியும். இதன் காரணமாக அதானி வில்மார், காட்ரிஜ் அக்ரோவெட், இமாமி ஆகிய நிறுவனங்களுடன் பதஞ்சலியும் இந்நிறுவனத்தைக் கைப்பற்ற துடிக்கிறது.

பதஞ்சலி

பதஞ்சலி

தற்போதைய நிலையில் இந்த ஏலத்தில் பதஞ்சலி நிறுவனம் சுமார் 4,000 - 4,500 கோடி ரூபாய் அளவிலான தொகையை அறிவித்துள்ளது. பதஞ்சலியைத் தொடர்ந்து அதானி வில்மார் 2வது இடத்தில் உள்ளது.

ஆக ருச்சி சோயா நிறுவனத்தைக் கைப்பற்ற பதஞ்சலி நிறுவனத்திற்கு அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

 

 முதல் முறையாக..

முதல் முறையாக..

இதுமட்டும் அல்லாமல் பதஞ்சலி மிகப்பெரிய தொகைக்கு ஒரு நிறுவனத்தைக் கைப்பற்றுவது இது தான் முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

1997இல்..

1997இல்..

1997ஆம் ஆண்டில் ஒரு சிறு பார்மசியின் வாயிலாகத் துவங்கிய பதஞ்சலி நிறுவனத்தின் வர்த்தகம் வெறும் 10 வருடத்தில் 10,561 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+