ஈரான் அணு ஒப்பந்தம் என்றால் என்ன..? அமெரிக்க வெளியேறியது ஏன்..?

2015ஆம் ஆண்டில் ஈரான் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நாடுகள் மத்தியில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து தற்போது அமெரிக்க வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இதன் எதிரொலியாகத் தற்போது வளைகுடா நாடுகள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஈரான்

ஈரான்

அனுமதி இல்லாமல் ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரிப்பதாகக் கூறி யுனைடெட் நேஷன்ஸ் செக்யூரிட்சி கவுன்சில் அமைப்பில் இருக்கும் உலகின் சக்திவாய்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்தது.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

இதன் பின் பல்வேறு முயற்சிகளுக்குப் பின்பு ஈரான் மற்றும் யுனைடெட் நேஷன்ஸ் செக்யூரிட்சி கவுன்சில் நாடுகளுடன் 2 வருடம் பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள், அனுமதிகளுடன் Joint Comprehensive Plan of Action (JCPOA) என்ற ஒப்பந்தம் இரு தரப்புகள் மத்தியில் செய்யப்பட்டது.

இதைத் தான் ஈரான் அணு ஒப்பந்தம் எனக் கூறப்படுகிறது.

 

முக்கியமான விஷயம்

முக்கியமான விஷயம்

இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக ஈரான் புளூடானியம் மற்றும் யுரேனியம் ஆகிய இரு அணுசக்தி பொருட்களைப் பயன்படுத்த அதிகளவிலான கட்டுப்பாடுகள் விதித்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அணு ஆயுதத்தை இந்த இரண்டு தாதுகளை வைத்துத் தான் உருவாக்க முடியும்.

 

ஆய்வுகள்

ஆய்வுகள்

ஈரான் மீதனா பொருளாதாரத் தடையை நீக்கி, அணுஆயுதங்களைத் தயாரிக்கிறதா, அணுசக்தி வாய்ந்த பொருட்களை வைத்துள்ளதா என்பதை ஈரான் நாட்டில் பிற நாடுகள் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் எனப் பல கட்டுப்பாடுகளுடன் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

2015இல் ஒப்பந்தம்

2015இல் ஒப்பந்தம்

2015ஆம் ஆண்டு ஈரான் மற்றும் 6 சக்திவாய்ந்த நாடுகளுடன் JCPOA ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் பின் ஈரான் மீது இருந்த பொருளாதாரத் தடையை நீங்கியது. பல வருடங்களாகப் பொருளாதாரத் தடையால் நிதியில்லாமல் தவித்த ஈரான் தடை நீங்கிய உடனேயே அதிகளவிலான கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்து விற்பனை செய்யத் துவங்கியது.

ஈரானுக்குப் போட்டியாகப் பிற வளைகுடா நாடுகளும் கச்சா எண்ணெய்யை அதிகளவில் உற்பத்தி செய்தது.

 

அமெரிக்கா வெளியேற்றம்..

அமெரிக்கா வெளியேற்றம்..

இந்த முக்கியமான ஒப்பந்தத்தில் இருந்து தான் தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது டிரம்ப் அரசு.

JCPOA ஒப்பந்தம் செய்யப்பட்டுச் சுமார் 3 வருடங்கள் ஆன பின்பு அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம் ஓபாமா ஆட்சியில் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

டிரம்ப்

டிரம்ப்

அமெரிக்காவில் ஒபாமா ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைத் தொடர்ந்து எதிர்ந்து வரும் டிரம்ப் அரசு, தற்போது மிகமுக்கியமான அணு ஒப்பந்தத்தையும் எதிர்த்துள்ளது.

இதனால் சக்திவாய்ந்த நாடுகள் மத்தியில் மிகப்பெரிய பிரச்சனை உருவாகும் என்று அச்சமும் எழுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+