தொடர்ந்து 4 மாத உயர்வில் இருந்து தொழிற்துறை உற்பத்தி மார்ச் மாதத்தில் சரிவை சந்தித்துள்ளது. சந்தையில் புதிய வர்த்தகம் இல்லாததும், உற்பத்தியில் ஏற்பட்ட தொய்வும் தான் மார்ச் மாத சரிவிற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
மத்திய புள்ளியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின் படி தொழிற்துறை உற்பத்தி அளவு மார்ச் மாதத்தில் 4.4 சதவீதமாக உள்ளது, பிப்ரவரி மாதத்தில் இதன் அளவு 7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2016-17ஆம் நிதியாண்டில் இதன் அளவு மார்ச் மாதத்தில் 4.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இக்காலகட்டத்தில் சுரங்க துறை 2.8 சதவீதமாகவும், உற்பத்தித் துறை 4.4 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. அதேபோல் கேப்பிடல் கூட்ஸ் பிரிவு 1.8 சதவீதம் மட்டும் வளர்ச்சி அடைந்து 9 மாதத்தில் மோசமான வளர்ச்சியை அடைந்துள்ளது.
2018ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.3 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்பட உள்ளதாகக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.