அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்-ஐ கைப்பற்றிய நிலையில் வால்கார்ட் கூட்டணி இந்தியாவில் சுமார் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என வால்மார்ட் சிஇஓ டக் மெக்மில்லன் தெரிவித்துள்ளார்.
வால்மார்ட்
இந்தியாவில் தனது வர்த்தகத்தை ஆன்லைன் வாயிலாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என வால்மார்ட் திட்டமிட்டு யாரும் கொடுக்க முடியாத 16 பில்லியன் டாலர் என்ற வியக்க வைக்கும் தொகையைக் கொடுத்து 77 சதவீத பங்குகளை வாங்கத் தயாராகி நிற்கிறது.
வேலைவாய்ப்பு
இந்நிலையில் வால்மார்ட், பிளிப்கார்ட் கூட்டணியான வால்கார்ட் கூட்டணி மூலம் இந்தியாவில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என வால்மார்ட் சிஇஓ மெக்மில்லன் தெரிவித்துள்ளார்.
பெயர் மாற்றம்..
இந்நிலையில் பிளிப்கார்ட் பெயரை வால்மார்ட் ஆகவோ அல்லது வால்கார்ட் ஆகவோ மாற்றப்படுமா எனக் கேட்டபோது, பெயர் மாற்றம் எல்லாம் செய்யப்போவதில்லை. பிளிப்கார்ட் அதே பெயரை கொண்டே இந்தியாவில் இயங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
பேமெண்ட் சேவை
வால்மார்ட்க்கு, பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து தற்போது அதிக நன்மைகள் உண்டு, குறிப்பாகப் பிளிப்கார்ட் பேமெண்ட் சேவையை வால்மார்ட் இந்தியாவில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியும்.
பொருளாதாரம்
இதுமட்டும் அல்லாமல் வால்மார்ட், பிளிப்கார்ட் கூட்டணி மூலம் இந்திய ரீடைல் சந்தையில் பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்பட உள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் வளர்ச்சி அடையும்.