உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் கார்கள் பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்டும் நிலையில், இந்தியாவிலும் மஹிந்திரா, டாடா போன்ற முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இப்பிரிவில் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தி வருகிறது.
இதில் மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே பல எலக்ட்ரிக் கார்களைத் தயாரித்த சந்தைப்படுத்தி வெற்றி கண்டுள்ளது.
மத்திய அரசு
வல்லரசு நாடுகளைப் போலவே இந்தியாவிலும் எலக்ட்ரிக் கார்களைப் பயன்படுத்த ஏதுவான தளத்தை அமைத்துத் தரும் வகையில் மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய திட்டத்தை வடிவமைத்துள்ளது.
புதிய திட்டம்
நாட்டில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் மற்றும் ஸ்மார்ட் சிட்டிகளில் ஒவ்வொரு 3 கிலோமீட்டருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க முடிவு செய்துள்ளது. இதேபோல் எப்போதும் பிசியாக இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்திற்கும் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க முடிவு செய்துள்ளது.
மானியம்
இத்தகைய சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க விரும்பும் மக்களுக்கு நகராட்சியிடம் இருந்து நிலத்தை அளிக்கவும், தளத்தை அமைப்பதற்காகக் கருவிகள், கட்டமைப்புகள் ஆகியவற்றை மானிய விலைக்கு அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.
3-5 வருட திட்டம்
இதன் மூலம் அடுத்த 3-5 வருடத்திற்கு 30,000 ஸ்லோ சார்ஜிங் ஸ்டேஷன், 15,000 பாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட உள்ளது.
லாபம்
இதன் மூலம் மஹிந்திரா மற்றும் டாடா குழுமத்திற்கு மகிப்பெரிய வர்த்தக வாய்ப்புகள் உருவாகும்.
ஏற்கனவே மஹிந்திரா நிறுவனம், டெஸ்லா இந்தியாவில் தொழிற்சாலை அமைக்காத காரணத்தால் கொண்டாட்டத்தில் இருந்த நிலையில் தற்போது மத்திய அரசின் இத்திட்டம் பெரிய அளவிலான வாய்ப்பை உருவாக்கும். மேலும் டாடா தற்போது மஹிந்திராவுக்குப் போட்டியாக எல்க்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கியுள்ளது.