பாங்க் ஆப் இங்கிலாந்தின் கவர்னராக உள்ள மார்க் கார்னியின் பதவிக் காலம் இன்னும் ஒரு வருடத்திற்குள் முடிவடைய உள்ள நிலையில் அந்தப் பதவிக்கு இந்தியாவின் முன்னாள் ஆர்பிஐ கவர்னராக இருந்து ரகுராம் ராஜன் விண்ணப்பிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அதற்கு அவர் அப்படி எந்த எண்ணமும் தனக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ரகுராம் ராஜன்
2016-ம் ஆண்டு வரை இந்தியாவின் ஆர்பிஐ கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் தற்போது சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
பேட்டி
லண்டனில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ரகுராம் ராஜன் "சிகாகோ பல்கலைக் கழகத்தில் எனக்கு மிகவும் நல்ல வேலை இருக்கிறது. நான் உண்மையில் ஒரு கல்வியாளர், ஒரு தொழில்முறை மத்திய வங்கியாளர் அல்ல. நான் இங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கவர்னர்
இங்கிலாந்து சான்ஸ்லர் பிலிப் ஹேமண்ட் புதிய கவர்னருக்கு ஒரு வெளிநாட்டினரைத் தேர்வு செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளார். ரகுராம் ராஜனுடன் சேர்ந்து, பிற சாத்தியமான வெளிநாட்டு வேட்பாளர்களும் முன்னாள் மெக்சிகன் மத்திய வங்கியின் தலைவர் அகஸ்டின் கார்ஸ்டென்ஸும் பாங்க் ஆப் இங்கிலாந்தின் கர்வரான பதவிக்கு விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இங்கிலாந்து கருவூலம்
இங்கிலாந்து கருவூலம் இதுவரை இந்தப் பதவிக்கான விளம்பரத்தினை வெளியிடவில்லை. ஆக மொத்தத்தில் ரகுராம் ராஜன் கூறியிருப்பதைப் பார்க்கும் போது அவருக்குப் பாங்க் ஆப் இங்கிலாந்து கவர்னார் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.