சாமானிய மக்கள் தினசரி பயன்படுத்தும் காய்கறி, பழங்கள், உணவுப் பொருட்கள், போக்குவரத்து என அனைத்து அடிப்படை விஷயங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தாக்கம் நேரடியாக இருப்பது நாம் அறிந்ததே. இருப்பினும் மத்திய அரசும் மாநில அரசும் தங்களது வருவாய் குறையக்கூடாது என்பதற்காக எரிபொருள் விலையைத் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. கேட்டால் கச்சா விலை ஏற்றம் என சாக்கு போக்கு சொல்கிறார்கள். மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டுமே தங்கள் வரி விதிப்புகளை குறைத்துக் கொள்வதாக இல்லை. இப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி modi-யைப் பார்த்து நேரடியாக சவால்விடுகிறார்.
ஜிஎஸ்டி
நாட்டில் உள்ள அனைத்து வர்த்தகப் பொருட்கள் மற்றும் சேவைகளையு எல்லாம் மோடிஜியின் கனவுத் திட்டமான ஜிஎஸ்டி வரி அமைப்பிற்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் வருவாய் போய்விடும் என்கிற ஓரே காரணத்துக்காக மத்திய மாநில அரசுகள் பெட்ரேல், டீசலை ஜிஎஸ்டிக்குள் சேர்க்காமலேயே டபாய்த்து வருகிறார்கள்.
55 டாலர் கச்சா எண்ணெய்
மேலே சொன்னது போல் 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்த பின் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 105 டாலரில் இருந்து இறக்கம் கண்டு நவம்பர் 2016-ல் அதே ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் 55 டாலருக்கு விற்பனை ஆனது. ஆனால் மோடி அரசு மக்களுக்கு சுமையைக் குறைத்து பொருட்களை விலை குறைவாக விற்க வேண்டும் என்கிற எண்ணத்துக்கு பதிலாக நாட்டை நடத்துகிறேன் பேர்விழி என விட்ட காசை எடுக்க நினைத்தார். அதாவது கச்சா எண்ணெய் ஒரு பேரல் 105 டாலருக்கு விற்ற போது ஒரு லிட்டர் பெட்ரொல் 75 ரூபாய். அதே ஒரு பேரல் கச்சா எண்ணெய் 55 டாலருக்கு விற்ற போது ஒரு லிட்டர் பெட்ரோல் 70 ரூபாய்.
விலை உயர்வு
கச்சா எண்ணெய் விற்கும் நாடுகள் மட்டும் என்ன நஷ்டத்துக்கா விற்பார்கள். இந்நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தங்களது உற்பத்தி அளவை அதிகளவில் குறைத்துக் கொண்டது. இதனால் செயற்கையாக கச்சா எண்ணெய் விலையை உயர்த்தப்பட்டது. ஒரு கட்டத்தில் கச்சா எண்ணெய் விலை படிப்படியாக உயர துவங்கியது.
அமெரிக்காவின் முடிவு
சமீபத்தில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா வெளியேறிய நிலையில் இந்நாட்டின் மீது வர்த்தகத் தடைவிதிக்க டொனால்டு டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் கச்சா எண்ணெய் சந்தைக்கு வரும் ஈரான் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் தடைப்பட்டுப்பற்றாக்குறை அதிகரிக்கும், இதன் எதிரொலியாகக் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கச்சா எண்ணெய் 4 டாலர் வரையில்உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்தியா
பெட்ரோல், டீசல் தேவையைப் பூர்த்தி செய்யும் கச்சா எண்ணெய் தேவைக்கு வெளிநாடுகளை மட்டுமே நம்பியிருக்கும்இந்தியா போன்ற நாடுகள் இந்தக் கச்சா எண்ணெய் உயர்வில் அதிகளவில் பாதிக்கப்படும்.
ஆனால் இந்திய அரசால் இந்தப் பாதிப்பை மக்களுக்கு அளிக்காமல் தடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உச்ச விலை
2013-2014 காலகட்டத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் பிரென்ட் க்ரூடு 90 டாலர் முதல் 101 டாலர் வரையில்உயர்ந்தது, ஆனால் அப்போது ஆட்சியில் இருந்து மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பெட்ரோல், டீசல் மீதானவரியைக் குறைத்து விலையைக் கட்டுக்குள் வைத்தது.
இக்காலகட்டத்தில் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் அதிகப்படியான விலை (சென்னை) 79.55 ரூபாய், கச்சாஎண்ணெய் விலை 92 டாலர். குறைவான விலை 65.9 ரூபாய்.
ஜனவரி 15, 2016
ஜனவரி 15, 2016இல் பிரென்ட் க்ரூட் கச்சா எண்ணெய் விலை 35.55 டாலர் என்ற மிகக் குறைவான விலையில் வர்த்தகம்செய்யப்பட்ட நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல் விலை 59.45 ரூபாயாகவும், டீசல் விலை 45.36 ரூபாயாகவும் வர்த்தகம்செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலை..
தற்போது பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 79.46 டாலருக்கு விற்பனை செய்யப்படும் நிலையில் ஒரு லிட்டர் 78.46 ரூபாய்க்கு (சென்னை விலை) விற்பனை செய்யப்பட்டது.
ஒரு வார மற்றங்கள்
திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான 5 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.03 ரூபாய்வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 1.24 ரூபாய் உயர்ந்து சமானிய மக்களை வாட்டிவதைக்கிறது.
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம் (ஒரு லீட்டருக்கான விலை)
டெல்லி: 75.61 ரூபாய் (மே 13இல் 74.63 ரூபாய்)
கொல்கத்தா: 78.29 ரூபாய் (மே 13இல் 77.32 ரூபாய்)
மும்பை: 83.45 ரூபாய் (மே 13இல் 82.48 ரூபாய்)
சென்னை: 78.46 ரூபாய் (மே 13இல் 77.43 ரூபாய்)
இன்றைய டீசல் விலை நிலவரம் (ஒரு லீட்டருக்கான விலை)
டெல்லி: 67.08 ரூபாய் (மே 13இல் 65.93 ரூபாய்)
கொல்கத்தா: 69.63 ரூபாய் (மே 13இல் 68.63 ரூபாய்)
மும்பை: 71.42 ரூபாய் (மே 13இல் 70.20 ரூபாய்)
சென்னை: 70.80 ரூபாய் (மே 13இல் 69.56 ரூபாய்)
ஜியோவிற்குக் கொடுத்த அதிர்ச்சி செய்தி..!
நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!
வீட்டு கடன்
கச்சா எண்ணெய் விலை ஒப்பீடு
2000-ம் ஆண்டுகளில் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை சுமாராக 25 டாலரில் இருந்து அதிகரிக்கத் தொடங்கி 2008-ல் தன் வாழ்நாள் உச்சமான 140 டாலரைத் தொட்டது. ஆமாங்க. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 140 டாலர். அதன் பின் கொஞ்சகொஞ்சமாக இறங்கி 2014-ல் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 105 டாலருக்கு வந்தது, அதன் பின் இப்போது ஜனவரி 10, 2019 நிலவரப்படி ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 60 டாலருக்கு கிடைக்கிறது.
எவ்வளவு குறைத்தார்கள்
ஆக, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை சுமார் 50 சதவிகிதம் குறைந்தும், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை வெறும் 9 சதவிகிதம் தான் குறைத்தார்கள். ஜனவரி 2014-ல் சென்னையில் 75.77 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஒரு லிட்டர் பெட்ரொல் விலை, டிசம்பர் 2016-ல் 68.40 ரூபாய்க்கு விற்று கல்லா கட்டினார்கள்.