ஜிஎஸ்டிஎன் (www.gst.gov.in) இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனையால் ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-3 படிவத்தினைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2 நாட்கள் நீட்டித்து 2018 மே 22 செவ்வாய்க்கிழமை வரை செய்யலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டிஎன் தொழில்நுட்பத்தினைச் சரி செய்ய அவசர கால நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் வரி செலுத்துனர்களின் கோரிக்கையினை ஏற்று ஜிஎஸ்டிஆர்-3 படிவம் தாக்கல் செய்ய 2 நாட்கள் காலக்கெடு நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரலில் இது வரை 1.03 லட்சம் கோரி ரூபாய் வரை வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மே மாதத்திற்கான ஜிஎஸ்டி எவ்வளவு வசூலிக்கப்பட்டது என்ற விவரங்கள் ஜூன் மாதம் வெளியிடப்படும்.