அமெரிக்கா அரசு வழக்கம் போல், தான் செய்வது தான் சரி, எல்லா நாடுகளும் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சீனாவை அடக்கியாளத் திட்டமிட்டு, இந்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை அதிகளவில் விதித்தது டொனால்டு டிரம்ப் அரசு.
இந்நிலையில் அமெரிக்கா சற்றும் எதிர்பார்க்காத வகையில் சீனா அமெரிக்கா உடன் போட்டி போட்டு வரியை விதித்து அதிரவைத்தது. இதில் பாதிப்பு இரு நாடுகளுக்கும் அதிகமாக இருக்கிறது எனத் தெரிந்தும் சீனா உறுதியாக நின்று வரியை விதித்து அமெரிக்காவிற்குத் தண்ணி காட்டியது.
இதனால் அமெரிக்கா சீனா இடையில் மிகப்பெரிய வர்த்தகப் போர் உருவாகும் சூழ்நிலை கூட உருவானது
பிரச்சனை முடிவு
வர்த்தக இழப்பைத் தாங்க முடியாது என்பதை உணர்ந்த அமெரிக்கப் பேச்சுவார்த்தைக்குச் சீனாவை அழைத்து இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகப் போர், வரி விதிப்பு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
வரிக் குறைப்பு
இந்நிலையில் சீனா தனது ஆட்டோமொபைல் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்படும் பயணிகள் கார்கள் மீதான வரியை 15 சதவீதமாகக் குறைத்தது.
இது பிஎம்டப்ள்யூ, போர்டு, டாடா மோட்டார்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
25 சதவீத வரி
10 வருடங்களுக்கும் அதிகமாக இறக்குமதி கார்கள் மீது விதிக்கப்பட்டு இருந்து 25 சதவீத வரி அளவீட்டை தற்போது அமெரிக்கா சீன வர்த்தகப் போர் பிரச்சனை பேச்சுவார்த்தை முடிவடைந்தன வாயிலாகச் சீனா இதன் அளவை 10 சதவீதம் குறைத்து 15 சதவீதமாக அறிவித்துள்ளது.
பங்குகள்
சீனாவின் அறிவிப்பைத் தொடர்ந்து ஜாகுவார் லேன்ட் ரோவர் விற்பனை உரிமையைப் பெற்றிருக்கும் டாடா மோட்டார்ஸ், பிஎம்டபள்யூ, டையாம்ளர் ஆகிய நிறுவனப் பங்குகள் உயர்வடைந்தது.
டாடா மோட்டார்ஸ்
சீனாவில் டாடா மோட்டார்ஸ் தயாரிப்புக்கு பெரிய அளவிலான வர்த்தகம் இல்லையென்றாலும், இந்நிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் ஜாகுவார் லேன்ட் ரோவர் நிறுவனத்தில் பெரிய அளவிலான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இதன் அடிப்படையில் சீனாவின் அறிவிப்பைத் தொடர்ந்து மும்பை பங்குச்சந்தையில் இருக்கம் டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகள் 4.7 சதவீதம் வரையில் உயர்ந்தது.
பிற நிறுவனங்கள்
அதேபோல் பிராங்க்ப்ரூட் சந்தையில் இருக்கும் பிஎம்டபள்யூ 1.5 சதவீதமும், டயாம்ளர் 1.3 சதவீதமும் உயர்வடைந்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications