அமெரிக்கா அரசு வழக்கம் போல், தான் செய்வது தான் சரி, எல்லா நாடுகளும் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சீனாவை அடக்கியாளத் திட்டமிட்டு, இந்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை அதிகளவில் விதித்தது டொனால்டு டிரம்ப் அரசு.
இந்நிலையில் அமெரிக்கா சற்றும் எதிர்பார்க்காத வகையில் சீனா அமெரிக்கா உடன் போட்டி போட்டு வரியை விதித்து அதிரவைத்தது. இதில் பாதிப்பு இரு நாடுகளுக்கும் அதிகமாக இருக்கிறது எனத் தெரிந்தும் சீனா உறுதியாக நின்று வரியை விதித்து அமெரிக்காவிற்குத் தண்ணி காட்டியது.
இதனால் அமெரிக்கா சீனா இடையில் மிகப்பெரிய வர்த்தகப் போர் உருவாகும் சூழ்நிலை கூட உருவானது
பிரச்சனை முடிவு
வர்த்தக இழப்பைத் தாங்க முடியாது என்பதை உணர்ந்த அமெரிக்கப் பேச்சுவார்த்தைக்குச் சீனாவை அழைத்து இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகப் போர், வரி விதிப்பு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
வரிக் குறைப்பு
இந்நிலையில் சீனா தனது ஆட்டோமொபைல் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்படும் பயணிகள் கார்கள் மீதான வரியை 15 சதவீதமாகக் குறைத்தது.
இது பிஎம்டப்ள்யூ, போர்டு, டாடா மோட்டார்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
25 சதவீத வரி
10 வருடங்களுக்கும் அதிகமாக இறக்குமதி கார்கள் மீது விதிக்கப்பட்டு இருந்து 25 சதவீத வரி அளவீட்டை தற்போது அமெரிக்கா சீன வர்த்தகப் போர் பிரச்சனை பேச்சுவார்த்தை முடிவடைந்தன வாயிலாகச் சீனா இதன் அளவை 10 சதவீதம் குறைத்து 15 சதவீதமாக அறிவித்துள்ளது.
பங்குகள்
சீனாவின் அறிவிப்பைத் தொடர்ந்து ஜாகுவார் லேன்ட் ரோவர் விற்பனை உரிமையைப் பெற்றிருக்கும் டாடா மோட்டார்ஸ், பிஎம்டபள்யூ, டையாம்ளர் ஆகிய நிறுவனப் பங்குகள் உயர்வடைந்தது.
டாடா மோட்டார்ஸ்
சீனாவில் டாடா மோட்டார்ஸ் தயாரிப்புக்கு பெரிய அளவிலான வர்த்தகம் இல்லையென்றாலும், இந்நிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் ஜாகுவார் லேன்ட் ரோவர் நிறுவனத்தில் பெரிய அளவிலான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இதன் அடிப்படையில் சீனாவின் அறிவிப்பைத் தொடர்ந்து மும்பை பங்குச்சந்தையில் இருக்கம் டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகள் 4.7 சதவீதம் வரையில் உயர்ந்தது.
பிற நிறுவனங்கள்
அதேபோல் பிராங்க்ப்ரூட் சந்தையில் இருக்கும் பிஎம்டபள்யூ 1.5 சதவீதமும், டயாம்ளர் 1.3 சதவீதமும் உயர்வடைந்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications