ஜப்பானின் சாப்ட்பாங்க் வசம் இருந்த பிளிப்கார்ட்டின் 21 சதவீத பங்குகளை வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தற்போது அதனை முழுமையாக விற்க முடிவு செய்துள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
சென்ற வாரம் முதலே சாப்ட் பாங்க் தங்கள் வசம் உள்ள பிளிப்கார்ட் பங்குகளை விற்று விட்டுப் பிற ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அது தற்போது உறுதியாகியுள்ளது.
மதிப்பு எவ்வளவு?
ஜப்பான் நிறுவனமான சாப்ட்பாங்க் பிளிப்கார்ட் நிறுவனத்தில் 16,750 கோடி ரூபாய் முதலீடு செய்து இருந்தது. தற்போது இந்த விற்பனையின் மூலம் 26,800 கோடி ரூபாயினைச் சாப்ட்பாங்க் பெற இருக்கின்றது.
முதலீடு
சென்ற வாரம் அடுத்து வரும் 10 ஆண்டுகளில் இந்திய நிறுவனங்களில் 10 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய இருப்பதாகச் சாப்ட்பாங்க் தலைமை நிர்வாக அதிகாரியான மசயோசி சன் தெரிவித்து இருந்தார். அப்போதே இவர் பிளிப்கார்ட் பங்குகளை விற்க உள்ளார் என்று செய்திகள் வந்தன.
சாப்ட்பாங்க்
இரண்டு வாரங்களுக்கு முன்பு பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் 16 பில்லியன் டாலர் அளித்து வாங்கிய நிலையில் 21 சதவீத பிளிப்கார்ட் பங்குகளை வைத்து இருந்த சாப்ட்பாங்க் அதனை விற்பது குறித்து முடிவு செய்யாமல் இருந்தது.
வால்மார்ட் பங்குகள் சரிவு
பிளிப்கார்ட் நிறுவனத்தினை வாங்கிய அடுத்த நாளே வால்மார்ட் பங்குகள் சரிந்த நிலையில் சாப்ட்பாங்க் வசம் உள்ள பிளிப்கார்ட்டின் பங்குகள் தான் இதற்காகக் காரணங்கள் என்று கூறப்பட்டது.
ஸ்னாப்டீல்
சாப்ட்பாங்க் நிறுவனம் அடுத்தகட்டமான மீண்டும் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் முதலீடுகளை அதிகரிக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் ஆனால் எவ்வளவு என்று மட்டும் முடிவு செய்யவில்லை என்று மசயோசி சன் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications