இந்தியாவில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்குவது மிகவும் குறைவாக உள்ளது எனக் கூறப்பட்டு வரும் நிலையில் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த சென்ற நிதி ஆண்டில் கடைசி 7 மாதத்தில் 39.36 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையமான ஈபிஎப்ஓ தெரிவித்துள்ளது.
மார்ச் மாத வேலை வாய்ப்புகள்
2018-ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் மட்டும் 6.13 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதுவே பிப்ரவரி மாதம் 5.89 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
அதிகம் வேலை வாய்ப்பு அளித்த துறைகள்
புதிய வேலை வாய்ப்புகளில் பாதிக்கும் அதிகமாக அனைத்து வயதிலிருந்தும் அல்லது குழுக்களுக்குமான நிபுணத்துவச் சேவை பிரிவில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், பொதுப் பொறியியல் தயாரிப்புகள், கட்டிடம் மற்றும் கட்டுமான தொழில், வர்த்தக & வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி துறைகளில் தான் அதிக வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன.
அதிகம் வேலை வாய்ப்பு அளித்த மாநிலங்கள்
தமிழ் நாடு, மகாராஷ்டிரா, குஜரார்த் ஆகிய மாநிலங்களில் தான் மார்ச் மாதம் வரையிலான கடைசி 7 மாதத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
ஈபிஎப்ஓ தரவு குறித்த சர்ச்சை
சென்ற மாதம் இது போன்று பேரோல் உருவாக்கத்தினை வைத்து புதிய வேலை வாய்ப்புகள் குறித்த தரவை வெளியிட்ட போது இது தவறான தரவு. அவ்வளவு வேலை வாய்ப்புகள் ஒன்றும் உருவாக்கப்பட்டது போன்று தெரியவில்லை விமர்சனம் எழுந்தது.
ஆனால் அதே போன்ற தரவை இந்த மாதமும் வெளியிட்ட வருங்கால வைப்பு நிதி ஆணையம் இனி ஒவ்வொரு மாதமும் இந்தத் தரவு விவரங்கள் குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்றும் என்று இது புதிய பேரோல் உருவாக்கப்பட்டதினை வைத்து அளிக்கப்படும் தரவு என்றும் கூறியுள்ளது.
ஈபிஎப்ஓ
வருங்கால வைப்பு நிதி ஆணையமானது 6 கோடிக்கும் அதிகமான வரையறுக்கப்பட்ட துறை சார்ந்த ஊழியர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு நிதி சேவையினை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.