ஐபிசி சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டதில் இருந்து வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் பல முன்னணி நிறுவனங்களை அரசு கைப்பற்றி ஏலம் விடும் அளவிற்குக் கொண்டு சென்றுள்ளது.
இந்திய வங்கித்துறைக்கே ஆபத்தாக விளங்கும் நிறுவனங்களின் வராக்கடன் பிரச்சனையைத் தீர்க்க ஐபிசி (Insolvency and Bankruptcy Code) சட்டம் கொண்டு வரப்பட்டது.
பயம்
இந்த ஐபிசி சட்டம் மூலம் நிறுவனம் அரசின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடுமோ என்ற அச்சத்தில் சுமார் 21,000 நிறுவனங்கள் வாங்கிய வங்கிக்கடனில் செலுத்தாமல் வைத்திருந்த நிலுவை தொகையைத் திரும்பச் செலுத்தியுள்ளனர்.
இதன் மூலம் நிலுவை தொகையில் சுமார் 83,000 கோடி ரூபாயை நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தியுள்ளது.
இக்கட்டான் சூழ்நிலை
இப்படிக் கடனின் நிலுவை தொகையைத் திருப்பிச் செலுத்திய நிறுவனங்களை வராக் கடன் பட்டியலில் வங்கிகள் சேர்க்காது, இதனால் வங்கிகளுக்கும் இது லாபம், நிறுவனங்களுக்கும் லாபம்.
வாரக்கடனில் சேர்க்கப்படவில்லை என்பால் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காது.
90 நாட்கள்
ஒரு நிறுவனம் வாங்கிய கடன் தொகைக்கான தவணை தொகையை 90 நாட்கள் செலுத்தவில்லை என்றால் அவை வாரக்கடன் பிரிவில் சேர்க்கப்பட்ட ஐபிசி சட்டத்தின் கீழ் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் நடவடிக்கை எடுக்கத் துவங்கி விடும்.
முக்கிய நிறுவனங்கள்
ஐபிசி அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு எஸ்ஸார், புஷன் குரூப், ஜெய்பிரகாஷ் குரூப் ஆகிய குழுமங்களின் நிறுவனங்கள் ஏலத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.