தூத்துக்குடியில் இருக்கும் வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர் யூனிட் நிறுவனத்திற்கு எதிராக 100 நாள் அமைதியாக ஆண், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டு அடுத்தத் தலைமுறையைக் காக்க போராடி வந்தனர்.
100வது நாள் போராட்டத்தின் போது நாசகார ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியைப் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் நடத்தினர். போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி குறி வைத்து போலீசார் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இத்துப்பாக்கிச் சூட்டில் 13 பேரின் உயிரை பறித்துள்ளது தமிழக காவல் துறை.
இந்த நிறுவனத்தைக் காப்பாற்று பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதும் தெளிவாகத் தெரியும் நிலையில், தூத்துக்குடி மக்களின் ரத்தம் சிந்தும் போராட்டம் யாருக்காக..? எதற்காக..?
வேதாந்தா
தூத்துக்குடியில் இருக்கும் வேதந்தா ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை அமைக்க இந்தியாவிலேயே பல மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வெளியேறிய நிலையில், கடைசியாகத் தமிழ்நாட்டில் ஒப்புதல் பெற்று அமைக்கப்பட்டது.
இந்த ஸ்டெர்லைட் ஆலையை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அனில் அகர்வால் வால்கேன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்னும் நிறுவனத்தின் வாயிலாக முதலீடு செய்து வேதாந்தா குழுமத்தில் சுமார் 61.7 சதவீத பங்குகளை வைத்துள்ளார்.
பல நிறுவனங்கள்
அனில் அகர்வால் தற்போது காப்பர், ஜிங்க், அலுமினியம், இருப்பு தாது பிரிவில் பல நிறுவனங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், கோன்கோலா காப்பர் மைன்ஸ், காப்பர் மைன்ஸ் ஆப் தாஸ்மானியா, ஹிந்துஸ்தான் ஜிங்க், வேதாந்தா அலுமினியம், மெட்ராஸ் அனுமினியம் கம்பெனி, வேதாந்தா அயர்ன், ஸ்டெர்லைட் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் அனில் அகர்வால் என்னும் ஒருவரின் கையில் உள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை
இந்தத் தொழிற்சாலையில் தற்போது வருடத்திற்கு 4 லட்சம் டன் காப்பர் கேத்தோட் உற்பத்தி செய்யப்பட்டு வருகிது. இதை 8 லட்சம் டன்னாக உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டு வரும் நிலையில் தான் போராட்டம் வெடித்தது.
மக்களின் போராட்டம் வெடித்த நிலையில் ஸ்டெர்லைட் நிர்வாகம் maintenance என்ற பெயரில் 15 நாட்கள் ஆலையை மார்ச் 27ஆம் தேதி மூடியது. ஆனால் இதுவரை ஆலை திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உரிமம் ரத்து
இந்நிலையில் ஏப்ரல் மாதம் தமிழ்நாடு மாசுபாட்டு வாரியம் வேதாந்தா நிறுவனம் உள்ளூர் சுற்றுச்சூழல் சட்டங்களை ஏற்று நடக்கவில்லை என் அறிவித்து இந்நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்தது. இதை மேல் முறையிடு செய்தது வேதாந்தா இந்த மறு விசாரணையை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கழிவுகள்
இதுமட்டும் அல்லாமல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் கழிவுகளை ஆற்றில் கொட்டுவதாகவும், ஆலைக்கு அருகில் இருக்கும் நிலத்தடி நீர் ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை என்றும் வேதாந்தா நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் தொழிற்சாலையை மூடுவது இதுவே முதல் முறையல்ல 2013ஆம் ஆண்டிலும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தொடுத்த வழக்கின் காரணமாகச் சில வாரங்கள் நிறுவனம் மூடப்பட்டது.
எதற்காக மக்களின் எதிர்ப்பு அதிகமாக உள்ளது..?
ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மூலம் மக்களுக்குப் பாதிப்புகள் இருக்கிறது என்பது நாம் அறிந்த நிலையில், நிறுவனத்தின் உற்பத்தி அளவை 8 லட்சம் டன்னாக உயர்த்தத் திட்டமிட்டு வரும் செய்தி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் வாயிலாகவே மக்களின் போராட்டம் வெடித்தது.
இந்த நிறுவனத்தின் இப்பகுதியில் இருக்கும் நிலத்தடி நீர் வளம் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது என்று மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல் சில அமைப்புகள் அரசின் விதிகளை மதிக்காமல் புகைபோக்கி (chimney) உயரவும் குறைவாக வைத்துள்ளது ஸ்டெர்லைட் ஆலை, இதனால் காற்று மாசுபாடு இப்பகுதியில் மிகவும் அதிகமாக உள்ளது எனவும் இந்நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.
நிறுவனத்தின் பதில்..
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைவரான பி.ராம்நாத் கூறுகையில் இந்தத் தொழிற்சாலை உச்சநீதிமன்றம், NEERI அமைப்பு கூறும் அனைத்து விதிகளும், IFC அமைப்பு கூறும் தரத்தின் அடிப்படையில் தான் உள்ளது. இதில் சந்தேகம் இருந்தால் நிறுவன கதவுகள் திறந்து இருக்கும். மக்கள் சோதனை செய்து பார்த்துக்கொள்ளலாம்.
ஆனால் போராட்டத்தில் இருக்கும் அமைப்புகளோ இந்நிறுவனத்தால் ஏற்படும் பிரச்சனையில் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் போது உள்ளே சென்று ஆய்வு செய்வதில் என்ன பயன் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தத் தொழிற்சாலை வேண்டும்...
தூத்துக்குடி வி ஓ சிதம்பரனார் போர்ட் டிரஸ்ட்-இன் சுமைதூக்கும் அமைப்பான் தூத்துக்குடி கப்பல் சுமைதூக்கித் அமைப்பு முதல்வரிடம் இந்தத் தொழிற்சாலை தொடர்ந்து இயங்க வேண்டும் என மனு கொடுத்துள்ளது.
இந்த அமைப்பின் தலைவர் டி. வேல்சங்கர் கூறுகையில் துறைமுகத்திற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டும் வருடத்திற்கு 38 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றுமதி செய்கிறது. இது இத்துறைமுகத்திற்கு மிகப்பெரிய வாடிக்கையாளராகவும் உள்ளது.
இத்தொழிற்சாலை மூடவதன் மூலம் பல ஆயிரம் சுமைதூக்கும் ஊழியர்களும், ஒட்டுநர்கள் எனப் பலதரப்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் அவர்களது குடும்பங்களும் இதன் மூலம் பாதிக்கப்படும் எனக் கூறியுள்ளார். மேலும் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன், வைன்டிங் வயர் உற்பத்தியாளர் அணைப்பு ஆகிய அமைப்புகளும் ஸ்டெர்லைட் ஆலையை மூட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
காப்பர் விலை..
இந்தத் தொழிற்சாலை மூடுவதன் மூலம் இந்தியாவில் காப்பர் விலை அதிகரிக்கும். மேலும் இத்தொழிற்சாலை வருடத்திற்கு 4 லட்சம் டன் காப்பரை உற்பத்தி செய்கிறது, இது இந்திய சந்தை தேவையின் 35 சதவீதம். இந்தியாவில் தயாரிக்கப்படும் காப்பர் அதிகளவில் வளைகுடா மற்றும் ஆசிய நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தேவை
மேலும் இந்தியாவில் கடந்த சில வருடங்களாகக் காப்பரின் தேவை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. இந்திய சந்தைக்கு மட்டும் காப்பரின் தேவை ஒவ்வொரு வருடமும் 7-8 சதவீதம் வரையில் உயர்ந்து வருகிறது.
மக்களின் போராட்டம்..
இந்த ஸ்டெர்லைட் ஆலை ஏற்கனவே பல விதிகளை மீறியதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் குற்றம்சாட்டியுள்ளது, அதேபோல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டியுள்ளது. இவை அனைத்தையும் தாண்டி இத்தொழிற்சாலை இயங்கி வருகிறது.
மேலும் இத்தொழிற்சாலையின் உற்பத்தி அளவை 2 மடங்கு அதிகரிப்பதாகத் திட்டமிட்ட போதே மக்கள் போராட்டத்தில் களமிறங்கினர்.
போலீஸ் செயல்
தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடிய மக்களின் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை வன்முறை வெடித்தது. இந்த வன்முறையைப் போலீஸ் அதிகாரிகள் கையாண்ட விதம் முற்றிலும் தவறானது. துப்பாக்கி சுடு நடத்தும் அளவிற்கு என்ன அவசியம் ஏற்பட்டது என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது.
மலைவாழ் மக்கள்
ஒடிசாவில் பாக்சைட் ஆலையை அமைப்பதற்காக, ஒரு பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்களை இவருடைய நிறுவனம் அடித்து துரத்தியது. இது தொடர்பான வழக்கை 2005ல் விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த ஆலை அமைக்க தடை விதித்தது.
ஜாம்பியா
இதேபோல் ஜாம்பியா நாட்டிலும், தாமிர தாதுக் கழிவுகளை அங்குள்ள ஆற்றில் கொட்டியதாக அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கியதால், அந்த ஆலையும் மூடப்பட்டது.
சட்ட விதிகளை மீறுவது என்பது அனில் அகர்வாலுக்கு அல்வா சாப்பிடுவது போல் என்று, அது தொடர்பான வழக்கை விசாரித்த ஜாம்பியா நீதிமன்றம் கூறியுள்ளது.
பங்குச்சந்தை
வேதாந்தா லிமிடெட் எதிராக வெடித்த போராட்டத்தின் எதிரொலியாக தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்நிறுவன பங்குகள் இன்று 5.08 சதவீத வரை சரிந்து 256.25 ரூபாய்க்கு வர்த்தம் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் லண்டன் பங்குச்சந்தையில் இருக்கும் வேதாந்தா ரிசோர்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பங்குகள் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
சூத்ரதாரி
3 மாதங்களுக்கு மேலாக நாசகார ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதன் 100-வது நாளில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்போம்.. அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அறிவிக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே முற்றுகைப் போராட்டத்தை அமைதி வழியில் நடத்துவோம் இதுதான் அப்பாவி மக்கள் வெளியிட்ட "பயங்கரவாத பிரகடனம்'.
இதற்குத்தான் 10-க்கும் மேற்பட்டோரை காவு கொண்டு 100-க்கும் மேற்பட்டோரை துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்துள்ளன. ஆனால் இந்தப் படுபாதகக் கொலையின் சூத்ரதாரி யார்? என்பதில் மாவட்ட ஆட்சியரையையும் முன்வைத்து ஏராளமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இப்போ எல்லோரும் எஸ்கேப்..
ஸ்டெர்ஆலைக்கு முதலில்1994 ஆம் ஆண்டு அனுமதி கொடுத்தது ஜெயலலிதா.. கேட்ட உடனேயே ஒரு கும்பல் காலியாயிடும்.
அடுத்த கட்ட அனுமதியை வழங்கியது 1996ல் முதலமைச்சர் கருணாநிதி என்ற சொன்னவுடன் இன்னொரு கும்பல் காலியாயிடும்..
அப்புறம் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிய போது அமைச்சராக இருந்தவர் ஆ.ராசான்னு சொன்னா இன்னும் கொஞ்சம் பேரு கப்சிப்..
ஆ.ராசா இருந்ததே காங்கிரஸ் கவர்மெண்ட்லடா சொன்னா காங்கிரஸ் கோஷ்டி எஸ்கேப்..
ஆனா, 2014ஆலையை ஜெயலலிதா மூடச்சொன்ன ஜெயலலிதாவின் உத்தரவை புறந்தள்ளிவிட்டு வெறும் அபராதம் விதித்து ஆலையை ரன் பண்ணச்சொன்னவர்கள் நாட்டாமைகள்..
இப்போ எல்லோரும் எஸ்கேப்..
டுபாக்கூர் சமாச்சாரம்
விசாரணை கமிஷன் என்பதெல்லாம் டுபாக்கூர் சமாச்சாரம்..
நீ எப்படி அறிக்கை தயார் பண்ணணும்னு முன்கூட் டியே சொல்லிட்டு ஒரு ஆளு கிட்ட பொறுப்பை ஒப்படைக்கிறது..
தூத்துக்குடி சம்பவத்தில் மிக முக்கியமான விஷயம் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு எந்த வகையில் இறுதிக்கட்டம் நேர்ந்தது என்பதுதான்..
எந்த நிலையில் இருந்தார்கள், எவ்வளவு தூரத்தி லிருந்து சுடப்பட்டார்கள், சுடக்கூடிய அளவுக்கு இரு தரப்புக்கும் இடையே வன்முறை கட்டுக்கடங்காமல் இருந்ததா போன்றவை தெரியவேண்டும்.
சுட்டே இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்ற கட்டத்தில் துப்பாக்கி குண்டை பறக்கவிட்டிருந்தால் அதை கொலை வழக்காக பதிவு செய்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவேண்டும்.
சமரசமற்ற ஒரு புலனாய்வு அமைப்பு கண்டுபிடிக்க விஷயங்களை விசாரணை ஆணையம் என்று போட்டு மூடி மறைக்கிறார்களே என்று நினைக்கும்போது....
சு. சாமி
ஸ்டெர்லைட் குறித்து விசாரணை உயர் நீதிமன்றத்தில் வரும், நிறுவன சார்பில் பா.சிதம்பரம் பங்கேற்பார். வேதாந்தா நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் பிசி.
சந்தோஷ் நாராயணன்
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது டிவிட்டரில் செய்த உருக்கமான டிவீட்
ஆர்ஜே. பாலாஜி
ஆர்ஜே. பாலாஜி-யின் இந்த டிவீட்க்கு பல எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.