நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் தனது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அலுவலகத்தில் புதிதாக 430 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியதன் மூலம் புளோரிடா வர்த்தகத்தில் தனது ஊழியர் எண்ணிக்கையை 1,500 ஆக உயர்த்தியுள்ளது.
அமெரிக்கா இன்சூரன்ஸ் நிறுவனமான டிரான்ஸ்அமெரிக்கா உடன் டிசிஸ் பல ஆண்டு வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்துள்ள நிலையில், ஊழியர் எண்ணிக்கையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
டிரான்ஸ்அமெரிக்கா
இந்நிறுவனத்தின் 1 கோடி பாசிலிதாரர்களுக்குச் சேவைகளை எளிமையாகப் பயன்படுத்தவும், டிஜிட்டல் சேவையாக மேம்படுத்தவும் டிசிஎஸ் உடன் கூட்டணி வைத்துள்ளது. இதன் மூலம் டிரான்ஸ்அமெரிக்கா அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் திட்டமிட்டு வருகிறது.
டிசிஎஸ்
இந்த ஒப்பந்தத்தின் படி டிசிஎஸ், டிரான்ஸ்அமெரிக்காவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்-இல் இருக்கும் பல மாடி அலுவலகத்தில் சில மாடிகள் முழுவதும் டிசிஎஸ் ஊழியர்கள் அமர்த்தப்பட்டுப் பணியாற்ற உள்ளனர்.
430 ஊழியர்கள்
இதுமட்டும் அல்லாமல் டிரான்ஸ்அமெரிக்காவின் 430 முன்னாள் ஊழியர்கள் தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் சேர்ந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அலுவலகத்தில் பணியாற்ற துவங்கியுள்ளனர். இதன் மூலம் ளோரிடா வர்த்தகத்தில் டிசிஎஸ் ஊழியர்கள் எண்ணிக்கை 1,500 ஆக உயர்ந்துள்ளது.
விசா பிரச்சனை
அமெரிக்கா தொடர்ந்து ஹெச்1பி விசா கட்டுப்பாடுகளை அதிகரித்து வரும் நிலையில், இந்திய ஐடி நிறுவனங்கள் தங்களது வர்த்தகம் பாதிக்காமல் இருக்க அதிகளவிலான அமெரிக்க ஊழியர்களைப் பணியில் அமர்த்தி வருகிறது.