ரிசர்வ் வங்கியின் முதல் தலைமை நிதியியல் அதிகாரி சுதா பாலகிருஷ்ணன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் அமைப்பின் நிர்வாகத் தலைவரான சுதா பாலகிருஷ்ணன் ரிசர்வ் வங்கியின் முதல் தலைமை நிதியியல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர்பிஐ கவர்னராக உர்ஜித் பட்டேல் நியமிக்கப்பட்ட பின்பு உயர்மட்ட நிர்வாகத்தில் ஏற்பட இருக்கும் மிக முக்கிய மாற்றமாக இது பார்க்கப்படுகிறது.

 சுதா பாலகிருஷ்ணன்

சுதா பாலகிருஷ்ணன்

தணிக்கை கணக்காளரான சுதா பாலகிருஷ்ணன், நாட்டின் மிகப்பெரிய டெபாசிட்டரி அமைப்பான NSDL அமைப்பின் துணை தலைவராக உள்ளார்.

தற்போது ரிசர்வ் வங்கி பணியை ஏற்கும் காரணத்தால் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி பணியில் இருந்து வெளியேற உள்ளார்.

 

3 வருடம்

3 வருடம்

ரிசர்வ் வங்கியின் முதல் தலைமை நிதியியல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட சுதா பாலகிருஷ்ணனின் பணி நியமனம் மே 15ஆம் தேதி முதல் துவங்கப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் இவர் 12வது ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

மேலும் இவர் இப்பதவியில் அடுத்த 3 ஆண்டுகளுக்குப் பணியாற்றுவார் எனவும் தெரிகிறது.

 

முக்கியப் பணி

முக்கியப் பணி

ரிசர்வ் வங்கியின் இருப்புநிலை அறிக்கையை அனைத்துத் திட்டங்களும், விதிமுறைக்களுக்கும் உட்பட்டு உள்ளதா என்பதைக் கவனிக்கும் முக்கியமான பணியைத் தான் சுதா பாலகிருஷ்ணன் செய்ய உள்ளார்.

இதர பணிகள்

இதர பணிகள்

கணக்கு மற்றும் பட்ஜெட் பணிகளைத் தவிரக் கார்பரேட் மூலோபாயம் பணிகளான பிராவிடென்ட் பண்ட் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்வது போன்ற பணிகளிலும் அவர் ஈடுபட உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sudha Balakrishnan appointed first CFO of Reserve Bank of India

Sudha Balakrishnan appointed first CFO of Reserve Bank of India
Story first published: Monday, May 28, 2018, 14:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X