மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இந்தியருமான சத்ய நாதெல்லா ரோபோக்கள் மனித வேலை வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்றும் அதனால் நிறையச் சிக்கல்கள் தீரும் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சத்ய நாதெல்லா அளித்த பேட்டியில் மனித வாழ்க்கை மீது தொழில்நுட்பம் நெறிமுறையாகப் பயன்படுத்தினால் நல்லது தான் என்று தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லை
ரோபக்களால் மனிதர்களின் வேலை வாய்ப்பு குறைந்து விடும் என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என்றும் ரோபோக்களுக்கு மனிதர்களுக்குமான குறிப்பையும் விளக்கியுள்ளார்.
சர்வதேச அடிப்படை வருமானம்
மனிதர்களுக்கு மாற்றாக ரோபோக்களைப் பணிகளைச் செய்ய அனுமதிக்கும் போது சர்வதேச அடிப்படை வருமானம் தேவைப்படும், தொழிலாளர் இயக்கத்துடன் ஒப்பிடுகையில், மனிதர்கள் எப்போதும் வேலை என்பது இருக்க வேண்டும்.
மரியாதை உள்ளது
"வேலை செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு மரியாதை உள்ளது, எனவே நாம் அதனைத் தொடர வேண்டும்," என்று அவர் கூறினார்.
என்ன செய்ய வேண்டும்?
2018 ஆம் ஆண்டில் செய்யப்பட வேண்டியது என்னவென்றால், நெறிமுறைகளைச் சுற்றியுள்ள உரையாடல்கள், செயற்கை நுண்ணறிவை உருவாக்குகின்ற பொறியியலாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பயன்படுத்தக்கூடிய கொள்கைகள், எனவே நாம் செய்யும் தெரிவுகளை நாம் பாகுபடுத்திக் கணினிகளை உருவாக்கக்கூடாது என்பது தான் நாம் உறுதி செய்ய வேண்டிய விஷயம், "என்று அவர் கூறினார்.