மும்பை: பெட்ரோல், டீசல் விற்பனை செய்து வரும் இந்தியன் ஆயில் நிறுவனம் ஓஎன்ஜிசி-ஐ பின்னுக்குத் தள்ளி இந்தியாவில் அதிக லாபம் அளிக்கும் பொதுத் துறை நிறுவனம் என்ற பெயரை தொடர்ந்து இரண்டாம் ஆண்டாகத் தக்கவைத்து கொண்டுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் சென்ற வாரம் வெளியிட்ட 2018-2019 நிதி ஆண்டின் 4-ம் காலாண்டிற்கான அறிக்கையில் 21,346 கோடி ரூபாய் நிகர லாபம் பெற்றுள்ளதாகத் தெரிவித்திருந்தது. இது 2016-2017 நிதி ஆண்டில் பெற்ற 19,016 கோடி ரூபாயினை விட 12 சதவீத உயர்வாகும்.
ஓஎன்ஜிசி நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட 4-ம் காலாண்டு அறிக்கையில் 11.4 சதவீத உயர்வுடன் 19,945 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந்துள்ளதாகத் தெரிவித்து இருந்தது.
ரிலையன்ஸ்
2017-2018 நிதி ஆண்டு இந்திய தனியார் துறை நிறுவனங்களில் அதிக லாபம் பெற்ற நிறுவனம் என்ற பெயரினை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் பெற்றுள்ளது. 36,075 கோடி ரூபாய் உடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமாகத் தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக முதல் இடத்தில் உள்ளது
டிசிஎஸ்
தனியார் நிறுவனங்களில் இந்தியாவின் மிகப் பெரிய மென் பொருள் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 25,880 கோடி ரூபாயுடன் 2-ம் இடத்தினைப் பிடித்துள்ளது.
ஓஎன்ஜிசி
இந்தியாவில் அதிக லாபம் அளிக்கும் நிறுவனமாக நீண்ட காலமாக ஓஎன்ஜிசி நிறுவனம் இருந்து வந்த நிலையில் மூன்று ஆண்டு முன்பு ரிலையன்ஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் அதனைப் பின்னுக்குத் தள்ளின.
லாபம்
மூன்று ஆண்டுக்கு முன்பு ஓஎன்ஜிசி நிறுவனத்தின் லாபம் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களின் மொத்த லாபத்தினை விட அதிக நிகர லாபம் அடைந்து வந்திருந்தது.
மானியம்
இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் அடைந்து வரும் லாபத்தினால் மத்திய அரசு அவர்களுக்கு எந்த ஒரு மானியத்தினை அளிக்கத் தேவையில்லை என்றும் ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications