ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராகப் பொதுத் துறாஇ வங்கியான ஐடிபிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து மகேஷ் குமார் ஜெயின் நியமிக்கப்படுகிறார் என்று திங்கட்கிழமை மத்திய அரசு அறிவித்தது.
மகேஷ் குமார் ஜெயின்-க்கு 3 ஆண்டுகள் வரை இந்தப் பதவி அளிக்கப்பட்டுள்ளது என்றும் 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக வங்கி துறையில் அனுபவம் கொண்டவர் என்று நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறையின் செயலாளரான ராஜிவ் குமார் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
எனவே ஆர்பிஐ வங்கியின் துணை கவர்னரான மகேஷ் குமார் ஜெயின் குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் முதன் முதலாக வங்கி துறையில் பணிபுரிய துவங்கியுள்ளார் மகேஷ் ஜெயின்.
ஐடிபிஐ வங்கி
மகேஷ் ஜெயின் இடிபிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2017-ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் பணிபுரிந்து வருகிறார்.
இந்தியன் வங்கி
ஐடிபிஐ வங்கிக்கு முன்பு 2015 நவம்பர் முதல் 2017 மார்ச் மாதம் வரை இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்துள்ளார். இந்தியன் வாங்கியில் 2013-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் நிர்வாக இயக்குநராகவும் ஜெயின் பொறுப்பு வகித்துள்ளார் என்று ஐடிபிஐ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
சிண்டிகேட் வங்கி
மகேஷ் ஜெயின் இந்தியன் வங்கியில் சேரும் முன்பு சிண்டிகேட் வங்கியில் பொது மேலாளராகப் பணிபுரிந்துள்ளார்.
படிப்பு
எம்பிஏ மற்றும் எம்காம் படித்துள்ள மகேஷ் ஜெயின், AIIB (வங்கியியல் இந்திய நிறுவனம் சான்றளிக்கப்பட்ட அசோசியேட்), CFA (பட்டய நிதி ஆய்வாளர்) மற்றும் FRM (நிதி இடர் மேலாளர்) தகுதிகளையும் பெற்றுள்ளார்.
உர்ஜித் படேல்
ஆர்பிஐ வங்கியின் தற்போதைய கர்வனராக இருக்கும் உர்ஜித் படேல் ஜனவரி 2013 முதல் துணை கவர்னர் பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரகுராம் ராஜன் அவர்கள் 2016 செப்டம்பர் 4-ம் தேதி அர்பிஐ கவர்னர் பதவியில் இருந்து விலகும் போது உர்ஜித் படேல் கவர்னராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications