ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராகப் பொதுத் துறாஇ வங்கியான ஐடிபிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து மகேஷ் குமார் ஜெயின் நியமிக்கப்படுகிறார் என்று திங்கட்கிழமை மத்திய அரசு அறிவித்தது.
மகேஷ் குமார் ஜெயின்-க்கு 3 ஆண்டுகள் வரை இந்தப் பதவி அளிக்கப்பட்டுள்ளது என்றும் 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக வங்கி துறையில் அனுபவம் கொண்டவர் என்று நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறையின் செயலாளரான ராஜிவ் குமார் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
எனவே ஆர்பிஐ வங்கியின் துணை கவர்னரான மகேஷ் குமார் ஜெயின் குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் முதன் முதலாக வங்கி துறையில் பணிபுரிய துவங்கியுள்ளார் மகேஷ் ஜெயின்.
ஐடிபிஐ வங்கி
மகேஷ் ஜெயின் இடிபிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2017-ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் பணிபுரிந்து வருகிறார்.
இந்தியன் வங்கி
ஐடிபிஐ வங்கிக்கு முன்பு 2015 நவம்பர் முதல் 2017 மார்ச் மாதம் வரை இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்துள்ளார். இந்தியன் வாங்கியில் 2013-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் நிர்வாக இயக்குநராகவும் ஜெயின் பொறுப்பு வகித்துள்ளார் என்று ஐடிபிஐ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
சிண்டிகேட் வங்கி
மகேஷ் ஜெயின் இந்தியன் வங்கியில் சேரும் முன்பு சிண்டிகேட் வங்கியில் பொது மேலாளராகப் பணிபுரிந்துள்ளார்.
படிப்பு
எம்பிஏ மற்றும் எம்காம் படித்துள்ள மகேஷ் ஜெயின், AIIB (வங்கியியல் இந்திய நிறுவனம் சான்றளிக்கப்பட்ட அசோசியேட்), CFA (பட்டய நிதி ஆய்வாளர்) மற்றும் FRM (நிதி இடர் மேலாளர்) தகுதிகளையும் பெற்றுள்ளார்.
உர்ஜித் படேல்
ஆர்பிஐ வங்கியின் தற்போதைய கர்வனராக இருக்கும் உர்ஜித் படேல் ஜனவரி 2013 முதல் துணை கவர்னர் பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரகுராம் ராஜன் அவர்கள் 2016 செப்டம்பர் 4-ம் தேதி அர்பிஐ கவர்னர் பதவியில் இருந்து விலகும் போது உர்ஜித் படேல் கவர்னராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.