எப்போதும் இல்லாத வகையில் தற்போது இந்தியாவின் வர்த்தத சந்தை, முதலீட்டு சந்தை, பொருளாதார அளவீடுகள் என அனைத்தும் பல ஏற்ற இறக்கங்களைச் சந்திப்பது மட்டுமல்லாமல் குழப்பமான நிலையில் உள்ளது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் தான் ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தை நடத்தி வருகிறது.
இக்கூட்டம் நாளை முடியும் நிலையில் ரிசர்வ் வங்கி என்ன முதலீட்டுச் சந்தையின் மூலம் வர்த்தகத்தையும், பொருளாதாரத்தையும் எப்படி நிலை நிறுத்த வேண்டும் என்பதே தற்போதைய வேலையாக உள்ளது.
நாணய கொள்கை
2018ஆம் ஆண்டின் 4வது காலாண்டு பணவீக்க கணிப்புகளில் ஏப்ரல் கொள்கையில் 4.5 சதவீதமாகவும், பிப்ரவரி கொள்கையில் 5.1 சதவீதமாகவும் இருக்கும் என அறிவித்தது.
அதேபோல் 2019 முதல் அரையாண்டு பணவீக்க கணிப்புகளில் ஏப்ரல் கொள்கையில் 4.7 - 5.1 சதவீதமாகவும், பிப்ரவரி கொள்கையில் 5.1 -5.6 சதவீதமாகவும் இருக்கும் என அறிவித்தது.
2019 இரண்டாவது அரையாண்டில் பணவீக்க கணிப்புகள் ஏப்ரல் கொள்கையில் 4.4 சதவீதமாகவும், பிப்ரவரி கொள்கையில் 4.5-4.6 சதவீதமாகவும் இருக்கும் என அறிவித்தது.
ஏப்ரல் மாத கொள்கை
ரிசர்வ் வங்கியின் ஏப்ரல் மாத கொள்கையில் பணவீக்க இலக்கைக் குறைக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் பங்குச்சந்தையில் அதிக முதலீடு குவிந்தது, ஆனால் பத்திர வருவாய்ச் சரிந்தது.
இதனால் அடுத்த நாணய கொள்கையில் இதனை ஈடு செய்யும் வகையில் கண்டிப்பாக வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும் என ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆச்சார்யா தெரிவித்தார். இதனால் சந்தையில் பத்திர வருவாய் மீண்டும் உயர்ந்தது.
என்ன நடக்கும்..?
இத்தகைய சூழ்நிலையில் சந்தையில் கணிப்புகள் அடிப்படையில் 45 சதவீதம் பேர் வட்டி விகிதம் மற்றும் பணவீக்கம் இலக்குகளில் மாற்றம் இருக்காது எனவும் மீதமுள்ள 55 சதவீதம் பேர் வட்டி விகிதம் கண்டிப்பாக உயர்த்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
நாணய கொள்கை அமைப்பு
தற்போது இருக்கும் பொருளாதாரச் சூழ்நிலையில் பணவீக்கம் இலக்கு மற்றும் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் நாணய கொள்கையைச் சிறப்பாகச் செய்வது என்பது நாணய கொள்கை அமைப்பிற்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.
இது தான் தேவை..!!
தற்போது சந்தையில் இருக்கும் நிலையற்ற தன்மையைச் சரி செய்யவும், முதலீட்டாளர்களுக்கு ஏதுவான சூழ்நிலையை அமைத்து நீண்ட கால முதலீட்டுக்கு வழிவகுக்கும் வகையிலும், ரூபாய் மதிப்பை உயர்த்தும் வகையிலும் நீண்ட கால நன்மைகள் அடிப்படையில் கொள்கையை வடிவமைக்க வேண்டும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications