இந்திய ரிசர்வ் வங்கி மோடி அரசு வந்த பிறகு முதன் முறையாக ரெப்போ வட்டி விகிதத்தினை 0.25 சதவீதம் ஆக உயர்த்தியுள்ளது. இதனால் 6 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஆர்பிஐ வட்டி விகிதத்தினை உயர்த்துவதற்கு முன்பே எஸ்பிஐம் எச்டுஎப்சி, ஐசிஐசிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆ பரோடா, யூனியன் வங்கி மற்றும் கோடாக் மஹிந்ரா வங்கி உள்ளிட்டவர்கள் MCLR விகிதத்தினை 0.05 முதல் 0.20 சதவீதம் வரை உயர்த்தினர்.
வட்டி உயர வாய்ப்பு
தற்போது ஆர்பிஐ வங்கியும் ரெப்போ வட்டி விகிதத்தினை உயர்த்தி உள்ள நிலையில் வீட்டு கடன் மட்டும் இல்லாமல் பிற கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதமும் 0.05 முதல் 0.50 சதவீதம் வணிக வங்கிகள் உயர்த்த வாய்ப்புகள் உள்ளது.
உதாரணம்
ஒருவர் 50 லட்சம் மதிப்பிலான வீட்டு கடன் ஒன்றை 20 ஆண்டுகள் தவணை கீழ் வாங்க இருக்கிறார் என்றால் 8.50 சதவீத வட்டி என்னும் போது மாத தவணை 43,391 ரூபாய் செலுத்த வேண்டி வரும். வட்டி மட்டும் 54,13,878 ரூபாய் ஆகும்.
அட்டவணை
தற்போது ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீத உயர்ந்துள்ள நிலையில் அதே அளவு கடன் மீதான வட்டி விகிதம் உயர்ந்து 8.75 சதவீதம் என்றாகும் நிலையில் மாத தவணை 44,185 ரூபாய் ஆகச் செலுத்த வேண்டி வரும். வட்டி மட்டும் 56,04,529 ரூபாய் ஆகும்.
வட்டி உயர்வைக் குறைக்க வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
வங்கிகள் உங்கள் கடன் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தும் போது வட்டி உயர்வைக் குறைக்க வேண்டும் என்றால் வங்கி கிளையை அணுகி கோரிக்கை வைக்கலாம் அல்லது பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் முறைக்குக் கோரிக்கை வைக்கலாம் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.