பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து 16 நாட்கள் உயர்ந்த பிறகு கடந்த ஒரு வாரமாக 1 பைசா, 7 பைசா, 5 பைசா எனக் குறைந்து வரும் நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தினைச் சேர்ந்த சந்து கவுடு பிரதமரின் நிவாரண நிதி திட்டத்திற்கு 9 பைசா அனுப்பு தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை செவ்வாய்க்கிழமை 9 பைசா குறைந்த நிலையில் சந்து கவுடுக்கு வித்தியாசமான முறையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று தோன்றியுள்ளது.
வித்தியாசமான எதிர்ப்பு
உடனே பிரதமர் நிவாரண நிதிக்காக 9 பைசாவிற்குச் செக் எழுதிய சந்து கவுடு அதனைத் தனது மாவட்ட கலெக்டர் கிருஷ்ணா பாஸ்கர் வசம் பிரஜாவானி எனப்படும் திட்ட கூட்டத்தின் போது ஒப்படைத்தது மட்டும் இல்லாமல் இது பிரதமர் மோடி அவர்களின் நிவாரண நிதி திட்டத்தில் சென்று சேர்ந்ததைத் தனக்கு உறுதி செய்யுமாறும் கூறியுள்ளார்.
கடிதம்
மேலும் அந்தச் செக்குடன் பிரதமர் மோடிக்கு இவர் அளித்த கடிதத்தில் ‘நீங்கள் பெட்ரோல் விலை குறைத்ததன் மூலம் தனக்கு இன்று 9 பைசா சேமிப்புக் கிடைத்தது. அதனை நான் உங்களின் நிவாரணத் திட்டத்திற்காக அளிக்கிறேன். நான் கொடுக்கு இந்த நிவாரணத் தொகையினை நல்ல விஷயங்களுக்காகப் பயன்படுத்துங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என்பது விவசாயிகளின் வருமானத்தினையும் பெரும் அளவில் பாதித்துள்ளது. தங்களது டிராக்ட்டர் மற்றும் விவசாயச் சாதனங்களுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் காய்கறி விலைகளும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
வரி
தெலுங்கானா அரசு பெட்ரோலிய பொருட்கள் மீது 35.2 சதவீதம் வரிய்னை வசூலித்து வருகிறது. மத்திய அரசு பெட்ரோல் மீது 19.48 ரூபாய் வரையிலும், டீசல் மீது 15.33 ரூபாய் வரையிலும் லிட்டர் ஒன்றுக்கு வரியாகப் பெறுகின்றது.
ராம்தேவ் திட்டத்திற்கு யோகி எதிர்ப்பு..
அசராத அனில் அகர்வால்..


Click it and Unblock the Notifications