பதஞ்சலி நிறுவனத்திற்கு யோகி ஆதித்யநாத் நேரடி உதவி.. பாபா ராம்தேவ் மகிழ்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா தலைமையில் இயங்கி வரும் பதஞ்சலி நிறுனத்தின் பதஞ்சலி உணவு மற்றும் ஹெர்பல் பார்க்-ஐ உத்தரப் பிரதேசத்தில் அமைக்க அம்மாநில அரசு நிலம் வழங்க மறுத்த நிலையில், இப்பூங்காவை வேறு மாநிலத்திற்கு மாற்றத் திட்டமிட்டது பதஞ்சலி நிர்வாகம்.

இந்தப் பிரச்சனை பெரிதாக வெடித்த நிலையில் உணவு பூங்காவையும், அதன் மூலம் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளைக் காப்பாற்றிக்கொள்ள யோகி ஆதித்யநாத் பல முக்கியச் சலுகையைப் பதஞ்சலி நிறுவனத்திற்கு அளித்துள்ளார்.

அரசு வேலைகள்

அரசு வேலைகள்

பதஞ்சலி நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டு இருந்த நிலத்தை அளிக்குமாறு இந்நிறுவனம் மாநில அரசிடம் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தது. இந்தக் கோரிக்கையை நிராகரிப்புச் செய்யப்பட்ட நிலையில் இப்பூங்கா வேறு மாநிலத்திற்கு மாற்றப்படும் எனப் பதஞ்சலி நிறுவன தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா அறிவித்தது பெரும் பிரச்சனையை உருவாக்கியது.

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

இந்நிலையில் இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் உத்தரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரடியாகத் தலையீட்டு பதஞ்சலி உணவு மற்றும் ஹெர்பல் பார்க்-கிற்கு ஒதுக்கப்படும் நிலம் குறித்துச் சட்டசபையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சலுகை

சலுகை

இந்தப் பிரச்சனையை முழுமையாகத் தீர்க்கவும், யோகி ஆதித்யநாத் அரசுக்கும் பதஞ்சலி நிறுவனத்திற்கும் இடையில் இருந்த கருத்து வேறுப்பாட்டைக் களைய வேண்டும் என்றும், உணவு பூங்காவை தன் மாநிலத்திற்குள்ளேயே வைத்துக்கொள்ளவும் உத்தரப் பிரதேசம் அரசு பாபா ராம்தேவ்-இன் கட்டுப்பாட்டில் இருக்கும் மற்றொரு நிறுவனத்திற்குச் சுமார் 86 ஏக்கர் நிலத்தை உள் குத்தகைக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

455 ஏக்கர்

455 ஏக்கர்

ஏற்கனவே பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்திற்கு அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆட்சியில் 455 ஏக்கர் நிலத்தை 25 சதவீத தள்ளுபடி விலையில் நவம்பர் 2, 2016இல் அளிக்கப்பட்டது.

கோரிக்கை

கோரிக்கை

இதன் பின்னர் மார்ச் 23, 2018இல் உணவு பூங்காவிற்கு 86 ஏக்கர் நிலம் உள் குத்தகைக்கு அளிக்க வேண்டும் எனப் பதஞ்சலி நிறுவனம் மாநில அரசிடம் கோரிக்கை வைத்தது.

தற்போது அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுப் பதஞ்சலி உணவு பூங்கா அமைக்க 86 ஏக்கர் நிலையைப் பதஞ்சலி நிறுவனம் பெற்றுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Yogi Adityanath may go the extra mile to help Ramdev

Yogi Adityanath may go the extra mile to help Ramdev
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X