இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் 99 சதவீதம் நபர்கள் வாட்ஸ்ஆப்பினை பயன்படுத்தி வரும் நிலையில் வங்கிகளும் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் போது அளிக்கப்படும் தகவல், பரிவர்த்தனை விவரங்கள், அலெர்ட்டுகள் போன்றவற்றை வாட்ஸ்ஆப் மூலம் அளிக்க வங்கிகள் முடிவு செய்துள்ளன.
அது மட்டும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் சேவை மைய உதவிகளையும் சாட் செய்து பெறக்கூடிய வகையில் வசதிகளைச் செய்ய வங்கிகள் முடிவு செய்துள்ளன.
சோதனை முயற்சி
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோடாக் மகேந்திரா வங்கி மற்றும் இண்டஸ் இண்டு வங்கி நிர்வாகங்கள் வாட்ஸ்ஆப் மூலம் தகவல் பரிமாறக்கூடிய சேவையினைச் சோதனை செய்து வருகின்றன.
கோடாக் & இண்டஸ் இண்டு வங்கி
எஸ்பிஐ, ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கிகள் இதனைச் செயல்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ள நிலையில் கோடாக் மற்றும் இண்டஸ் இண்டு வங்கிகள் சோதனை சேவையாக அறிமுகம் செய்துள்ளன.
கோடாக் வங்கி வாட்ஸ்ஆப் மூலம் பான் எண் விவரம் அளித்தல், கணக்கின் கிளைகளை மாற்றுதல் போன்ற சேவைகளை எல்லாம் வாட்ஸ் ஆப் மூலம் வழங்கி வருகிறது.
இண்டஸ் இண்டு வங்கி
இண்டஸ் இண்டு வங்கி அதிகாரப்பூர்வ வங்கியின் வாட்ஸ் ஆப் எண்ணை தங்களது மொபைல் எண்ணில் சேமித்து வைத்துக்கொண்டு வங்கி அதிகாரிகளுடன் சாட் செய்து விவரங்களைப் பெறலாம் என்று தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ
ஆர்பிஐ-ன் தற்போதைய விதிகளின் படி எஸ்எம்எஸ் சேவைக்கு மாற்றும் வாட்ஸ்ஆப் என்பதில்லை. ஆனால் வங்கிகள் இதையும் ஒரு சேவையாக அளிக்க முடிவு செய்துள்ளன. இந்தத் திட்டம் வெற்றிபெற்றால் வங்கிகளுக்கு எஸ்எம்எஸ் சேவைகளுக்காக ஏற்பட்டு வரும் செலவுகள் குறைய வாய்ப்புகள் உள்ளது.