தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மக்களின் கடும் போராட்டம் மற்றும் 13 பேரின் உயிர் தியாகத்தின் வாயிலாக ஆலை மூடப்பட்ட நிலையில், தற்போது வேதாந்தா நிறுவனத்தின் கிழக்கு ஒடிஷாவில் இருக்கும் அலுமினியம் உருக்காலையை மூட வேண்டும் என இப்பகுதியில் இருக்கும் பழங்குடி மக்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
1000 மையில்
13 பேரின் உயிர் தியாகத்தின் மூலம் உயிர்கொல்லும் ஸ்டெர்லைட் ஆலையை மூட முழுக் காரணமாகத் துத்துக்குடி மக்களின் வெற்றியும், நம்பிக்கையும் தற்போது 1000 மையில் தொலைவில் உள்ள ஒடிஷா மக்களுக்குக் கேட்டுள்ளது.
இங்கு வேதாந்தா ரிசோர்ஸ் நிறுவனத்தின் அலுமினியம் உருக்கலை உள்ளது, இதை மூட வேண்டும் என்று இப்பகுதியில் பல தலைமுறையாக வாழ்ந்து வரும் பழங்குடியினர் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.
பாக்சைட் சுரங்கம்
பல வருடங்களாகக் கிழக்கு ஒடிஷாவில் உள்ள பசுமை, காட்டுப் பகுதியில் அமைந்துள்ள நியாம்கிரி மலைப் பகுதியில் இருக்கும் பாக்சைட் சுரங்கத்திற்கு எதிராகப் பழங்குடியினர் போராடி வருகின்றனர்.
ரத்தம் சிந்த தயார்..
மேலும் பழங்குடி மக்களின் தலைவர் லாடோ சிகாகா கூறுகையில், "நியாம்கிரி-க்கா ரத்தம் சிந்தவும் தயார், உயிரை விடவும் தயார் எனக் கோடாரியை தோளில் சுமந்தபடி கூறியுள்ளார். இதே மன நிலையில் தான் இப்பகுதியில் இருக்கும் மக்களும் உள்ளனர்.
வேலைவாய்ப்பு
வேதாந்தா எங்களில் சிலருக்கு தான் வேலைவாய்ப்பை அளிக்க முடியும், ஆனால் இந்த நியாம்கிரி மலை எங்கள் எல்லோருக்கும் எல்லாமும் கொடுத்துள்ளது. இது எங்கள் நியாம்கிரி ராஜா, இந்த மலையை அவர்கள் கடவுளாக வணங்குகிறார்கள்.
ஜூன் 5ஆம் தேதி பழங்குடி மக்கள் அலுமினியம் உருக்காலையை நோக்கி நடந்து போராட்டம் நடத்தினர்.
பேனர்
மேலும் இந்தப் போராட்டத்தில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதில் சுற்றுச்சூழலையும், மனிதர்களையும் கொல்லும் வேதாந்தா இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். இது தூத்துக்குடி வீரர்களுக்குச் சமர்ப்பணம் என எழுதி இருந்தனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications