இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் மார்ச் மாதத்திற்கான நிதி அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் 6,218 கோடி ரூபாய் என்றும் இது வோடாஃபோன் நிறுவனத்தினை விட 22% அதிகம் என்பதும் ஏர்டெல் நிறுவனத்தின் 8,087 கோடி ரூபாயினை விட 12 சதவீதம் குறைவு என்றும் தெரியவந்துள்ளது.
இரண்டு வருடங்கள்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சேவை துவங்கப்பட்டு இரண்டு வருடங்கள் முடிவதற்குள் 25.6 சதவீத சந்தையினைப் பிடித்துள்ளது. இதுவே வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனத்தின் மொத்த வருவாய் சதவீதம் என்பது 21 மற்றும் 16.6 சதவீதங்களாக உள்ளது.
ஏஜிஆர்
சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய்(ஏஜிஆர்) தரவானது சந்தை பங்குகளின் அசல் மதிப்பினை காட்டிலும் கொஞ்சம் மாற்றம் செய்யப்பட்டு இருக்கும். ஆனால் ஒவ்வொரு சந்தாதார்கள் மூலமாக எவ்வளவு வருவாய் என்ற விவரங்களை வெளியிடவில்லை.
முதல் காலாண்டு அறிக்கை
2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டு அறிக்கையினை ஜியோ வெளியிடும் போது வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தினைப் பிடித்து இருப்பதாக அறிவிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
ஜியோ
ஜியோ நிறுவனம் 2016 செப்டம்பர் மாதம் தனது வணிக ரீதியான டெலிகாம் சேவையினைத் துவங்கிய நிலையில் இலவசங்கள் வாரி வழங்கி வேகமாக 5-ம் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற இடத்தினைப் பிடித்தது. அதே நேரம் ஆர்காம் நிறுவனம் மூடப்பட்டது, ஏர்செல் நிறுவனம் திவால் ஆனது போன்ற காரணங்களால் 4-ம் இடத்தில் இடத்தில் இருந்து ஜியோ தற்போது இரண்டாம் இடத்தினைப் பிடிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளது.