சவுதி நாட்டைச் சேர்ந்த அவ்ஜான் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 50 சதவீத பங்குகளை 2012இல் சுமார் 1 பில்லியன் டாலர் தொகைக்குக் கோகோ கோலா கைப்பற்றியது. இதன் மூலம் இரு நிறுவனங்களும் இணைந்த வர்த்தகத்தைப் பல வழிகளில் விரிவாக்கம் செய்து வந்த நிலையில் தற்போது இந்நிறுவன தயாரிப்புகளை இந்தியாவிற்குக் கொண்டு வர கோகோ கோலா முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் பெப்சியின் டிராப்பிகானா, டிபரின் ரியல் மற்றும் பார்லே அக்ரோவின் ப்ரூட்டிக்குப் போட்டியாக இந்தியாவில் அவ்ஜான் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முக்கியக் குளிர்பான நிறுவனமான ராணியைக் கொண்டு வர கோகோ கோலா முடிவு செய்துள்ளது.
தற்போது உலகம் முழுவதும் கார்பனேடெட் குளிர்பானங்களை விடவும் ஜூஸ் வகைகள் தான் அதிகமாக வர்த்தகமாகி வருகிறது. இதன் அடிப்படையிலேயே இந்தியாவிற்கு ராணியைக் கொண்டு வர கோகோ கோலா முடிவு செய்துள்ளது.
ஜூஸ் வகைகளில் தற்போது கோகோ கோலா மினிட் மெயிடு மற்றும் மாசா ஆகியவற்றை விற்பனை செய்யும் நிலையில் ராணி மூலம் அதிகளவிலான வர்த்தகச் சந்தை கைப்பற்றத் திட்டமிட்டுள்ளது.