94 சதவீத ஊழியர்கள் மாயம்.. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மோசமான நிலை..!

அதீத கடனில் சிக்கித்தவிக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், தற்போது எரிக்சன் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய நிலுவை தொகையைத் திருப்பி அளிப்பதைக் குறித்து ஆலோசனை செய்து வருகிறது.

இந்நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் இருந்து 94 சதவீத ஊழியர்கள் வெளியேறியுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.

52,000 ஊழியர்கள்

52,000 ஊழியர்கள்

2008-10ஆம் ஆண்டிகளில் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் சுமார் 52,000 பேர் பணியாற்றி வந்தனர், பல்வேறு காரணங்களுக்காகப் படிப்படியாக இந்நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்து தற்போது வெறும் 3400 ஆக உள்ளது.

94 சதவீத ஊழியர்கள்

94 சதவீத ஊழியர்கள்

2010 முதல் 2018 வரையிலாகக் காலத்தில் இந்நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 94 சதவீதம் அதாவது 48,000 பேர் இந்நிறுவனத்தை விட்டு வெளியேற்றியுள்ளது. சமீபத்திய காலத்தில் ஏந்தொரு நிறுவனத்திலும் இப்படியொரு மோசமான நிலை அடைந்ததில்லை.

 வர்த்தகம் மூடல்

வர்த்தகம் மூடல்

முகேஷ் அம்பானியின் ஜியோ அறிமுகத்திற்குப் பின் பிற டெலிகாம் நிறுவனங்களைப் போல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்பை சந்தித்து ஜனவரி மாதத்தில் மொத்த வர்த்தகத்தையும் மூடியது.

கடன்

கடன்

தற்போதைய நிலையில் இந்நிறுவனம் சுமார் 45,000 கோடி ரூபாய் கடனில் சிக்கித்தவித்து வருகிறது.

 டவர் சொத்துக்கள்

டவர் சொத்துக்கள்

மேலும் இந்தக் கடனை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் இருக்கும் டெலிகாம் டவர்களை விற்பனை செய்வதன் மூலம் அடைக்கத் திட்டமிட்டுள்ள அனில் அம்பானிக்கு எரிக்சன் நிறுவனத்தின் கடன் நிலுவை பெரிய தலைவலியாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+