ஹூஸ்டன்: அமெரிக்காவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் சென்னையைச் சேர்ந்த திவ்யா சூர்யாதவரா தலைமை நிதி அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார். அட்டோமொபைல் துறையில் முதன் முறையாகப் பெண் ஒருவருக்கு இந்தத் தலைமை நிதி அதிகாரி பதவியினைப் பெற்றுள்ளது முக்கியமான ஒன்றாகும்.
திவ்யா சூர்யாதவராக்குத் தற்போது 39 வயது ஆகும் நிலையில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகச் செப்டம்பர் 1 முதல் பதவி ஏற்பார் என்று தெரிவித்துள்ளனர்.
தலைமை நிர்வாக அதிகாரி
ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக மேரி பாரரா என்ற எண் 2014-ம் ஆண்டு முதல் இருந்து வரும் நிலையில் தலைமை நிதி அதிகாரி பதவி திவ்யாவிற்குக் கிடைத்துள்ளது.
அட்டோமொபைல் துறை
அட்டோமொபைல் துறையின் முதல் பெண் தலைமை அதிகாரி மேரி பாரரா மற்றும் தலைமை நிதி அதிகாரி திவ்யா சூர்யாதவரா என்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சென்னை
திவ்யா சூர்யாதவரா மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காமர்ஸ் பிரிவில் முதுகலை பெற்ற பிறகு அமெரிக்கா சென்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துள்ளார்.
பணிகள்
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் 2005-ம் ஆண்டு இவர் பணியில் சேரும் முன்பு யூபிஎஸ் மற்றும் பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளார்.
ஜெனரல் மோட்டார்ஸ்
2005-ம் ஆண்டு முதல் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இவர் பல் வேறு பணிகளில் தனது தனித்துவத்தினைக் காட்டி ஜப்பானின் சாப்ட்பாங்க் இடம் இருந்து 2.25 பில்லியன் டாலர் முதலீட்டினை பெற்று தர முக்கியக் காரணமாகவும் இருந்துள்ளார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் தலைமை முதலீட்டு அதிகாரியாக 2013-2017 நிதி ஆண்டுகளில் இருந்துள்ளார்.
ஸ்டீவன்ஸ்
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக 2014 முதல் பதவி வகித்து வந்த ஸ்டீவன்ஸ் ஓய்வு பெறும் வரை ஆலோசகராகத் தொடருவார் என்றும் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications