விமான பயணிகள் தங்களது பேகுகளை கொடுத்த பின்பு விமான நிலையத்தில் போர்டிங் பாஸ் பெறும் வழக்கம் இந்தியாவில் 12க்கும் அதிகமான விமான நிலையங்களில் நீக்கப்பட்டு பயோமெட்ரிக் செக்கிங் மூலம் எவ்விதமான தடங்களும் இல்லாமல் விமான பயணத்தை பயணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுக்குறித்து விமான நிலைய பாதுகாப்பு பிரிவு தலைவர் கூறுகையில், டெக்னாலஜி உதவியுடன் போர்டிக் கார்டு லெஸ் முறை இந்தியாவில் உள்ள 59 விமான நிலையங்களிலும் கூடிய விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. அடுத்த சில வருடங்களில் இந்தியாவில் இருக்கும் அனைத்து விமான நிலையத்திலும் இந்த முறை அமலுக்கு வரும் என கூறியுள்ளார்.

தற்போது நாங்கள் 2 முக்கிய திட்டத்தில் பணியாற்றி வருகிறோம், இதில் முதலாவது அனைத்து பாதுகாப்பு திட்டங்களையும் இணைத்து அதை ஒற்றை தளமாக இயக்க வேண்டும் என்பதே இது. இதற்கு நாங்கள் பயோமெட்ரிக், வீடியோ அனலிட்டிக்ஸ் மற்றும் ரோபஸ்ட் கண்டிரோல் சிஸ்டம் ஆகியவற்றை உள்ளடக்கி இத்திட்டத்தை உருவாக்கி வருகிறோம் என CISF தலைவர் ஒபி சிங் கூறியுள்ளார்.
இந்திய விமான போக்குவரத்து பிரிவுக்கு மட்டும் சுமார் 20,000 பாதுகாப்பு வீரர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள், இதில் 2,000 பேர் அடுத்த சில வாரங்களில் பணியில் சேர்க்கப்பட உள்ளனர். தற்போது CISF பிரிவில் சுமார் 27,000 பாதுகாப்பு வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications