ஹெச்1பி விசா மீது அமெரிக்கா தொடர்ந்து கட்டுப்படுத்தி வரும் நிலையில், தற்போது பிரிட்டன் டையர் 2 விசா பிரிவில் மிகப்பெரிய தளர்வை அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய தொழில்நுட்ப அதிகாரிகள், என்ஜினியர்கள், ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
தெரஸா மே
பிரிட்டன் பிரதமர் தெரஸா மே வெளியிட்ட அறிவிப்பில், அந்நாட்டில் மருத்துவப் பிரிவில் தகுதியான மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பெரிய அளவிலான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு டையர் 2 பிரிவில் அளிக்கப்படும் 20,700 விசாவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முழுமையாக அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்
இதன் மூலம் பிரிட்டன் நாட்டில் இனி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அளிக்கப்படும் விசா, எண்ணிக்கை கட்டுப்பாடுகள் இல்லாமல் அளிக்கப்படும் என இந்த அறிவிப்பின் மூலம் தெரிகிறது.
40 சதவீதம்
இதுவரை டையர் 2 பிரிவில் அளிக்கப்படும் விசா எண்ணிக்கையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மட்டும் சுமார் 40 சதவீதம் அளிக்கப்படுகிறது.
வாய்ப்பு
தற்போது இந்த 40 சதவீத விசாக்கள் பிரிட்டனில் அதிகம் தேவைப்படும் ஐடி, என்ஜினியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைக்கும். இதனால் அமெரிக்கா தற்போது விதித்துள்ள கட்டுப்பாடுகள் மூலம் பிரிட்டன் தளர்வுகள் பெரிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
நாஸ்காம்
இந்த அறிவிப்பை ஐடி துறை கட்டுப்பாட்டு நிறுவனங்களான நாஸ்காம் வரவேற்பு அளித்துள்ளது.
2017 பின்
டிசம்பர் 2017 மற்றும் மார்ச் 2018 காலகத்தில் மட்டும் சுமார் 1000 டெக் ஊழியர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த 40 சதவீத விசா ஐடி நிறுவன ஊழியர்களுக்குக் கிடைக்கப் பெரிய வாய்ப்பு உள்ளது.