பாஜக-ன் மாநிலங்களவை உறுப்பினரான சுப்பிரமணியன் சுவாமி பியூஷ் கோயல் யார் என்றும் அவர் தான் இடக்கால நிதி அமைச்சர் என்பதற்கான எந்த ஏற்பாடும் இல்லையே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பியூஷ் கோயால் நிதி அமைச்சரா இல்லையா என்பதினை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம்
பிரதமர் அலுவலக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பியூஷ் கோயல் தான் நிதி அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அருண் ஜேட்லி எந்தத் துறையும் இல்லாத இலக்கா இல்லாத அமைச்சராக உள்ளார். இதுவே நிதி அமைச்சகத்தின் இணையதளத்தில் அருண் ஜேட்லி தான் நிதி அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.
சுப்பிரமணியன் சுவாமி
ஆங்கில நாளிதழ் ஒன்றில் இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் என்று உள்ளது, அதே நேரம் மற்றொரு செய்தியில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி என்று குறிப்பிட்டுள்ளனர். எப்படி நிதி அமைச்சர் மற்றும் இடைக்கால நிதி அமைச்சர் என இருவரும் ஒரே நேரத்தில் இருக்க முடியும் என்று சுப்பிரமணியன் சுவாமி கேட்டுள்ளார்.
அருண் ஜேட்லி
அருண் ஜேட்லிக்கு சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த காரணத்தினால் ஓய்வு அளிக்கப்பட்டதால் பியூஷ் கோயல் இடைக்கால நிதி அமைச்சராகச் செயல்பட்டு வருகிறார்.
மனிஷ் திவாரி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மனிஷ் திவாரி டிவட்டரில் ஜூன் 18-ம் தேதி கேள்வி எழுப்பிய பிறகு சுப்பிரமணியன் சுவாமியும் இதைப் பற்றிக் கேட்டுள்ளார்.
பொருளாதாரம் பற்றித் தெரியாத நிதி அமைச்சர்கள்
என்னைப் பொறுத்தவரையில் பொருளாதாரம் மற்றும் அரசியல் இரண்டையும் புரிந்து கொண்ட ஒருவர் தான் நிதி அமைச்சராக இருக்க முடியும், அப்படி மத்திய அமைச்சரவையில் ஒருவராவது இருக்கிறார்களா என்றும் தனது சொந்த கட்சியினையே கிழித்துத் தொங்கவிட்டுள்ளார்.